அஸ்ஸலாமு அழைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பிஸ்மிள்ளாகிர் ரஹ்மானிர்
ரஹீம்
நண்பர்களே நாம் வரலாறு
பதிவின் தொடர்ச்சியில் இன்றைய தினம் நபி ஹல்ரத் சாலீஹ் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை
காண விருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் இதன் மூலம் உள்ள படிப்பினைகளை அல்லாஹ் நமக்கு
விளங்க வைப்பானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களது
அறிவாற்றலை அதிகப்படுத்தி தருவாயாக ஆமீன்
ஹல்ரத் நபி சாலீஹ் அளஹி வசல்லம் அவர்கள் அரபி மொழிக்காக அனுப்ப
பட்ட நான்கு தூதர்களில் ஒருவர் . இவர் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள
ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த சமூத் எற்ற கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி . இவர் தனது
ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் முன் அவர்களது சமூகத்தார்கள் இவரை அறிவுஜீவியாகவும் நல்ல
பண்புடயவகராகவும் கண்டார்கள் அனால் எப்பொழுது அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்களோ அன்றிலிருந்து அவர் அவமதிக்கப்பட்டவர்கலாகவே இருந்தார்கள் . மேலும்
இந்த நிலை சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் மட்டும் ஏற்படவில்லை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள்
அனைவரின் சமூகத்தார்களும் இவ்வாரே கூறுகிறார்கள் மேலும் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு
அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்விலும் அரங்கேறியுள்ளது அல்லாஹ் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு
அலைஹி வசல்லம் அவர்களுக்கு நபியே உமது குடும்பத்தார்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வாயாக என்ற வசனத்துக்கு
இணங்க அல்லாஹுவின் தூதர் தனது குடும்பத்தார்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்கள் அவர்களிடம்
இப்பொழுது இந்த மலைக்கு பின்னால் ஒருகூட்டம்
உங்களை தாக்கவருகிறது என்று கூறினால் என்னை
நம்புவீர்களா என்று நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களது குடும்பத்தார்களிடம்
கேட்டார்கள் அதற்கு அவர்களின் பதில் " முஹம்மதே (சள்ளலாஹு அலைஹி வசல்லம் ) உங்களை
நாங்கள் பொய் சொல்பவர்களாக கண்டதில்லை நீங்கள் எங்கள் மத்தியில் மிகவும் கண்ணியமானவராக
இருக்கிறீர்கள் ஆதலால் உங்களை நம்பிக்கை கொள்வோம்
என்று கூறினார்கள் அப்பொழுது நமது ஹபீப்
முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் " வணக்கத்திற்குரிய
நாயன் அல்லாஹ் ஒருவன்தான் அவனையன்றி யாரும்
இல்லை அல்லாஹ் அவன் சிலை அல்லாஹ் அவன் கல்லல்ல என்று கூறினார்கள் அதற்கு கூடும்பதார்கள்
உன் கைகள் நாசமாகட்டும் ஔதுபில்லாஹ் . என்ன வார்த்தை அல்லாஹ் எங்கள் நாயகத்தை நீ மிகவும்
கண்ணிய படுத்துவாயாக ஆமீன் . மேலும் நமது ஹபீப்
முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் மக்களிடம் ஏகத்துவ பிரசாரத்தை ஆரமித்தார்கள் அப்பொழுது
அந்த மக்கள் அபுதாலிபிடம் " அபூதாலிபே உனது சகோதரனின் மகனை அமைதியாக இருக்க சொல்
அவர் மக்கா வாசிகளில் குழப்பத்தை உண்டு பண்ணிகொண்டிருக்கிறார்
நமது மக்களிடையே பகைமையை ஏற்படுத்துகிறார் பயந்துகொள்ள சொல் என்னவேண்டும் அவருக்கு மக்காவின்
ஆட்சி வேண்டுமா மக்காவின் அழகிய பெண்கள் வேண்டுமா தருகிறோம் அவரை இப்பிரச்சாரத்தை விட்டு
நீங்க சொல் . அபுதாலிப் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் முஹம்மதே என்னை நெருக்கடிக்கு ஆளாக்கி விடாதிர் விட்டுவிடு
மகனே அதற்கு நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள்
என் தந்தையே எனது வலது கரத்தில் சூரியனை கொடுத்தாலும் எனது இடது கரத்தில் சந்திரனை
கொடுத்தாலும் இதை சொல்வதால் நான் கொல்லப்பட்டாலும்
சரியே நான் இதை விட்டு நீங்க மாட்டேன் .. அல்லாஹு அக்பர் . அல்லாஹுவால் அனுப்பப்பட்ட
அனைத்து நபிமார்களும் இந்த சிரமம்தான் அடைந்திருக்கிறார்கள்
மேலும் நபி சாலிஹ்
அலைஹி வசல்லம் அவர்களது சமூகமான சமூது கூட்டம் எத்தகயவர்கள் என்றால் அவர்கள் பள்ளத்தாக்கில்
மலைகளை குடைந்து அவர்கள் கூடாரம் அமைத்திருந்தார்கள் என்பதை அல்லாஹுவே சாட்சி கூறுகிறான்
" இன்னும் பள்ளத்தாக்கில்
பாறையை குடைந்து வசித்துவந்த சமூது கூட்டத்தையும் "(காணவில்லையா)
அழ பஜ்ர் 89
-9
மேலும் நபி சாலிஹ்
அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகதார்களை பார்த்து எனது சமூகமே
நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனையன்றி வணக்கத்திற்கு உரிய நாயன் வேறு
இல்லை அவனுக்கே அஞ்சுங்கள் எனக்கு கீழ்படியுங்கள் என்று அணைத்து நபிகலைபோல் அவர்தனது பிரசாரத்தை துவங்கினார்
, மேலும் அவர்கள் அம்மக்களிடம்
எனது சமூதார்களே அகிலதாரின் இரட்சகனான அல்லாஹுவையே வணங்குங்கள் அவனே உங்களை இப்பூமியில்
இருந்து உண்டாக்கினான் அதிலேயே உங்களை வாசிக்கவும்
செய்தான் ஆதலால் நீங்கள் அவனிடமே பிளைபொறுப்பு தேடுங்கள் தவ்பா செய்து அவன்பக்கமே நீங்கள்
திரும்புங்கள் என்று கூறினார்கள் மேலும் அவர் நிச்சயமாக எனது ரட்சகன் சமீபமானவன் பாவமன்னிப்பை
ஏற்றுகொல்பவனாக இருக்கிறான் என்று கூறினார்கள்
அதற்கு அந்த மக்கள்
கூறினார்கள் ஷாலிஹே (அலைஹி வசல்லம் ) இதற்கு முன்னால் உங்களை நாங்கள் எங்களது விருப்பதுக்கூரிய
அறிவுஜீவியாகவே நாங்கள் உங்களை கண்டிருந்தோம் ஆனால் நீங்கள் எங்கள் மூதாதையர்கள் வணங்கிகொண்டிருந்த
அந்த சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களை தடுக்க நினைகிறீரா . மேலும் நீர் எதன்
பக்கம் அலைகிரீரோ நிச்சயமாக நாங்கள் அதை சந்தேகிதவர்கலாகவே இருக்கிறோம் என்று கூறினார்கள்
. அம்மக்கள் சாலிஹே உனக்கு யாரோ சூனியம் செய்துவிட்டார்கள் என்று அம்மக்கள் ஏளனம் செய்தார்கள்
.
அதற்கு சாலிஹ் அலைஹி
வசல்லம் அவர்கள் எனக்கு அல்லாஹுவுடன் இருந்து
நல்லுபதேசம் வந்ததே தவிர வேறு இல்லை நான் உங்களை நல்வளியின் பக்கம் அழைக்க ஆனால் நீங்களோ
என்னை வழிகெட்ட கூட்டத்தினரின் பக்கம் அலைகிறீர்கள்
மேலும் அவர் அல்லாஹ் அவன் புறத்திலிருந்து
அருளை எனக்கு கொடுத்திருக்க நான் அவனுக்கு மாறு செய்தால் அதற்கு அவன் என்னை தண்டிக்கும்
தருவாயில் அவனிடமிருந்து என்னை காப்பாற்றுபவன் யார் ? நீங்கள் அனைவரும் எனக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும்
எனக்கு அதிகமாக்கிவிடமாட்டீர் என்று கூறினார்
அதற்கு அம்மக்கள்
எங்களுக்கு நீங்கள் நபிதான் என்பதை நிரூபிக்க ஒரு அத்தாட்சியை கொண்டுவாரும் என்று கூறினார்கள்
இதற்கு இதனை பற்றி மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அந்த சமூத் குட்டதிளிருந்து
ஒரு மனிதர் ஒரு கல்லை காண்பித்து இந்த கல் பிளந்து ஒரு சினையான ஒட்டகம் வரவேண்டும்
அந்த ஒட்டகம் எங்கள் கண்முன்னால் வைத்து தனது குட்டியை வெளியாக்க வேண்டும் அவ்வாறு நீர் கொண்டு வந்தால் நான் உன்னுடைய செய்தியை ஏற்று
கொள்கிறேன் என்று கூறினான் பிறகு அதனை நமது
தந்தை சாலிஹ் அலைஹி வசல்லம் அல்லாஹுவிடம் மன்றாடி அதனை அத்தாட்சியாக கொண்டுவந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிபிடுகிறார்கள்
. மேலும் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் இதோ
அல்லாஹுவின் அத்தாட்சியான ஒட்டகம் இதனை நீங்கள் துன்புறத்த நினைக்காதீர் அதனை
அதன் போக்கிலே விட்டுவிடுங்கள் என்று கூறினார் மேலும் இதனை நீங்கள் துன்புறுத்தினால்
அல்லாஹ்வில் தண்டனை வெளிப்பட்டுவிடும் அதற்கு அஞ்சிகொல்லுங்கள் என்று எச்சரித்தார் . ஆனால் அம்மக்கள் அந்த ஒட்டகத்தை
துன்புறுத்த நாடினார்கள் அதனிலும் அக்கூட்டத்து பெண்கள் அதில்
மும்புரமாக இருந்தார்கள் .
மேலும் அந்த நிராகரிக்கும்
கூட்டதார்களின் பிரதானிகள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களை விசுவாசம் கொண்ட அந்த நன்
மக்களிடம் " நிச்சயமாக இந்த சாலிஹ் இறைவனால் அனுப்பப்பட்ட துதரென நீங்கள் உறுதியாக
அறிவீர்களா என்று வினவினார்கள் அதற்கு அந்த நன்மக்கள் நிச்சயமாக அவர் எதை கொண்டு விசுவாசம்
கொண்டாரோ அத்தூதை விசுவாசம் கொள்பவர்களாக உள்ளோம் என்று கூறினார்கள்
அதற்கு அந்த கர்வம் கொண்ட அந்த கூட்டத்தின் தலைவர்கள் நீங்கள் நிச்சயமாக எதை விசுவாசம்
கொள்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்க
கூடியவர்கள் என்று கூறினார்கள்
அதற்கு அந்த சமூது
கூட்டத்தார்கள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களிடம் நிச்சயமாக நாங்கள் உம்மையும் உம்மை
பின்பற்றும் அந்த மக்களையும் துர்ச்சகுனமாகவே
கருதுகிறோம் என்று கூறினார்கள் அதற்கு சாலிஹ் அளஹி வசல்லம் உங்கள் துர்ச்ச குணம் (அதன்
காரணம் ) அல்லாஹுவிடமே இருக்கிறது மாறாக நிச்சயமாக அல்லாஹுவினால் சோதனைக்கு உள்ளாக்கப்படும்
சமூகமாகவே இருக்கிறீர்கள் என்று கூறினார்கள்
அதற்கு அந்த மக்கள்
கூறினார்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வாக்களித்த அந்த வேதனையை எங்களுக்கு
கொண்டுவரவும் என்று கூறினார்கள்
அதற்கு நம் தந்தை
சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் என் சமூகத்தாரே நன்மைக்கு முன்னாள் என் தீமையை எதிர்
கொள்ள அவசர படுகிறீர்கள் .நீங்கள் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கோர வேண்டாமா அதன்மூலம்
நீங்கள் அல்லாஹுவின் பொருத்தத்தை பெறலாமே என்று கூறினார் .
மேலும் அல்லாஹ் தனது
திருமறையிலே சாட்சி அளிக்கிறான் மேலும் அக்கூட்டத்தில் ஒன்பது நபர்கள் உள்ளார்கள் அவர்கள்
இந்த பூமியில் குழப்பம் செய்பவர்களாகவே இருந்தார்கள் அவர்கள் ஒன்பது நபர்களும் சேர்ந்து
ஓர் திட்டம் தீட்டினார்கள் அல்லாஹ் அத்தாட்சியில் உள்ள அந்த பெண் ஒட்டகத்தை நம் ஒன்பது
பேர்களும் சேர்ந்து அதனை கொன்று விடுவோம் என்று கூறினார்கள் அவ்வொரு நபரும் பாலமாதிரியாக
சூழ்ச்சிகள் செய்து அந்த ஒட்டகத்தில் கால் நரம்பை அறுத்துவிட்டார்கள் . மேலும் அதனை
கொலையும் செய்து விட்டார்கள் அதனை கண்ட சாலிஹ்
அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹுவின் அத்தாட்சியை பொய்யாக்கி விட்டீர்கள்
இதனால் நீங்கள் கண்டிப்பாக வேதனை அனுபவிப்பீர் .
மேலும் அவர்கள் மற்றொரு
சூழ்ச்சியை செய்தார்கள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இரவோடு இரவாக நாம் அவர்களை அழித்துவிடுவோம் என்று
நீங்கள் அனைவரும் அல்லாஹுவை கொண்டு சத்தியம் செய்து கொள்ளுங்கள் பின்னர் அவர்களது பாதுகாவலர்களிடம்
நிச்சயமாக அவர்கள் அளிக்கப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை என்று திட்டமாக கூறிவிடுவோம்
என்று ஒரு சூழ்ச்சியை அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் மேலும் அல்லாஹ் கூறுகிறான்
இதுபோல இவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அதனை முறியடிக்க வேதனையை கொண்டு அல்லாஹுவாகிய
அவன் சூழ்ச்சி செய்தான் என்று மேலும் அல்லாஹ் அதனை சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களுக்கு
அறிவித்து அவரையும் அவர்களது குடும்பத்தார்களையும் மேலும் அவரை பின்பற்றிய மக்களையும்
அழைத்து செல்ல உத்தரவிட்டான்
அதன் படி செல்லும்
முன் நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் அல்லாஹுவிர்க்கு மாறுசெய்து அவனது அத்தாட்சிகளை
பொய்யாக்கியதன் காரணமாக இன்னும் உங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
என்று கூறி அல்லாஹ்விடம் பிராத்தித்து அவரும் அவரை சார்ந்தவர்களும் அந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டார்கள் அல்லாஹ் எவ்வாறு அளித்தான்
என்பதை விரிவாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் அந்த மூன்று அவகாச நாட்களில்
முதல் நாள் அந்த மக்கள் அனைவரின் முகங்களும் சிவப்பாக மாறியது அதனை கண்டதும் அவர்கள்
சற்று தர்கிக்க தொடங்கினார்கள் மேலும் சாலிஹ் அவர்கள் போகும்பொழுது நாம் அனைவருக்கு
சூனியம் செய்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டார்கள் இரண்டாவது நாள் அவர்களது முகங்கள் கருப்பாக மாறிவிட்டது மேலும் அவர்களுக்கு தர்க்கம்
அதிகமாக மாறியது அவர்களின் சிந்தனை பலமாரியாக மாறியது மூன்றாவது நாள் அவர்கள் அனைவரின்
முகமும் மஞ்சள் நிறமாக மாரிவுட்டது அவர்களது உள்ளத்தில் ஒரு பய உணர்வு வந்துவிட்டது
.
இந்த விசியத்தில்
நமக்கு ஒரு படிப்பினையும் உண்டு என்று நான் கருதுகிறேன் ஏன் என்றால் அவர்கள் தங்கள் முகங்கள் மாற மாற அவர்களின்
சிந்தனைகள் சூனியமோ அல்ல, சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் சாபமா என்று தான்
சிந்தித்தார்கள் அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை ஏன்
என்றால் உள்ளத்தின் ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவனே அவன் நாடினால் மட்டுமே மரணிக்கும் தருவாயில்
பாவ மன்னிப்பு கோர வாய்ப்பு உள்ளது இந்த படிப்பினையை அறியாத மக்களாகவே நாம் நம் சிந்தனை
நம் எண்ணம் என்று மார்தட்டி கொண்டிருக்கிறோம் அல்லாஹ் பாதுகாப்பானாக " யா அல்லாஹ்
நாங்கள் மரணிக்கும் முன் பாவமன்னிப்பு கோரும் வாய்ப்பை எங்களுக்கு எங்கள் குடுபதர்களுக்கும்
எங்கள் சொந்தங்களுக்கும் உலக முஸ்லீம்களுக்கும் ஏற்படுத்தி தருவாயாக
" ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் " மேலும் மூன்றாவது நாள் முடிவில் அல்லாஹ்
தனது அதாபை (வேதனையை ) அல்லாஹ் இறக்கினான் ஒரே ஒரு இடி முழக்கம் தான் அவர்கள் அனைவரும்
குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள் "
மேலும் மார்க்க அறிஞர்கள்
கூறுகிறார்கள் நமது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக இந்த கூட்டத்தில் உள்ள ஒரு ஒருவன் அவனும்
அதாபு வரும் முன் சிறு வேலையாக அந்த ஊரைவிட்டு
வெளியே வந்து சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களும் அவரை சார்தவர்களுடன் மாகாவின்
எல்லையில் ஒரு பள்ளத்தாக்கில் தங்கி இருந்தார்கள் அவர்களுடன் அவனும் வந்து சேர்த்து
இருந்தான் பிறகு அவன் மக்காவின் எல்லையை தாண்டிய
பொழுது அவனையும் இடி அழித்துவிட்டது என்று குறிபிடுகிறார்கள்
மேலும் சாலிஹ் அலைஹி
வசல்லம் அவர்களும் அவரை சார்ந்தவர்களும் ஹஜ்ஜுக்கு சென்றதாக கூறப்படுகிறது .
மேலும் இதனை பற்றி
நமது நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்
அவர்கள் சஹாபக்களிடம் ஹஜ்ஜுக்கு செல்லும்பொழுது ஒரு பள்ளத்தாக்கை காண்பித்து
இதன் பெயர் என்ன என்று கேட்டார்கள் அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு தாலா அவர்கள் இந்த பள்ளத்தாக்கின் பெயர் வாதி அஸ்பான்
(asfan) என்று கூறினார்கள்
அதற்கு நமது நாயகம் நபி சல்லல்லாஹு அலைஹி
வசல்லம் இந்த வாதி அஸ்பானில்தான் நபி சாலிஹ்
அலைஹி வசல்லம் அவர்கள் தங்கி ஹஜ்ஜு செய்ததாக
கூறினார்கள் . மேலும் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் ஹரமின் (மக்காவின் ) எல்லைபகுதிகளிலேயே
வசித்து வந்து அங்கேயே மரணித்து ஹரமின் எல்லையில் அவர்களை அடக்கம் செய்தார்கள் என்று
மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் . அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் . மேலும்
தபூக் போருக்கு செல்லும் தருவாயில் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள்
தனது தோழர்களை பார்த்து சமூது கூட்டம் வசித்த அந்த இடத்தை கடக்கும் பொழுது அனைவரும்
அலுதவர்கலாகவே வாருங்கள் அளுகைவரவில்லை என்றால்
அழுவதுபோல் பாவனையிலாவது வாருங்கள் சிரிதவர்கலாக வந்துவிடாதீர்கள் என் என்றால் அல்லாஹுவின்
அதாபு உங்களையும் பிடித்து விடக்கூடும் . என்று அஞ்சினார்கள் .
அல்ஹம்துளில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
மாஷா அல்லாஹ் இன்றைய
தினம் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறை பார்த்தோம் இவைகள் அனைத்தையும் மாற்று
மத நண்பர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக
இதனை கதைவடிவில் அமைத்திருக்கிறேன் இவைகளில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் அல்லாஹுவிர்க்காக
என்னிடம் கேட்டு விடுங்கள் இதில் தவறை நீங்கள்
கண்டால் அதனை தெரிவித்துவிடுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக "எவர் ஒரு
பாதையில் இல்மைத் தேடிப் புறப்படுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான். மலக்குகள் இல்மைத்தேடக்கூடியவருக்காக
அவரின் செயலால் சந்தோஷமடைந்து தங்கள் இறக்கைகளை விரித்து வைக்கிறார்கள். " என்று
நமது நாயகம் சள்ளலாஹு அலைஹி வசல்லம் கூறியதாக
அபுதர்தா ரலி யல்லாஹுஅன்ஹு அறிவித்ததாக ஹதீத் நூல்ஹளில் பதிவாகி உள்ளது .. நாம் இதனை
வெறும் கதையாக பாராமல் இது உண்மைதானா என்று
அல்லாஹுவின் அருள்மறையில் தேட முற்படுவோம்
அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவக்குவான் இன்ஷா அல்லாஹ் .
இதில் எனக்கு அறியாத
பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால்
நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை
ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம் போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கு குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியா வில் பர்மா வில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே படித்து
உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில்
இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ் ரக்மதுசெய்வானாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. என் நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் உள்ள ஒரு குழுமத்தில் தங்கள் பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். அல்லாஹ் தங்கள் மார்க்க அறிவை மென்மேலும் அதிகப்படுத்த துஆ செய்கிறேன்.
ReplyDelete