ஔது பில்லாஹி மினஸ்
சைதாநிர் ரஜீம்
பிஸ்மிள்ளாகிர் ரஹ்மானிர்
ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ராமத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
நண்பர்களே இன்ஷா அல்லாஹ் வரலாற்று தொடர்ச்சியில் இன்றைய தினம் ஹூத் அலைஹி
வசல்லம் அவர்களின் வரலாற்றை இன்று இன்ஷா அல்லாஹ்
. அல்லாஹ் அருளிய எனது சிறிது அறிவின் தேடலில்
கிடைத்த குறிப்புகளை மற்றும் அல்லாஹ் தனது
குரானில் அவனின் அருள் பொருந்திய அவனின் வார்த்தையில்
நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு அருளியதில் இருந்தும் இன்ஷா
அல்லாஹ் ஹூத் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை
காண முற்படுவோம்
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களது
அறிவாற்றலை அதிகப்படுத்தி தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
ஹூத் அலைஹி வசல்லம்
அவர்களை அல்லாஹ் நபி நூஹ் அலைஹி வசல்லம் அவர்களுடைய
சமூகத்தை அல்லாஹ் வெள்ளபெருக்கத்தின் மூலம் அளித்ததற்கு பிறகு அல்லாஹ் நூஹ் அலைஹி வசல்லம்
அவர்களது நான்காவது தலைமுறையில் அல்லாஹ் ஹூத் அலைஹி வசல்லம் அவர்களை அல்லாஹ்
"ஆது" என்னும் கூட்டத்தார்களுக்கு அல்லாஹ் அருளினான்
வரலாற்று ஆசிரியர்கள்
குறிப்பிடுகிறார்கள் ஹூத் அலைஹி வசல்லம் அவர்கள்
தான் முதன் முதலில் அரபி மொழியை உருவாக்கியவர் என்று .. இதனை நம் ஹபீப் முஹம்மது சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்
அல்லாஹ் ஒவ்வொரு மொழியிலும் அல்லாஹ் ரசூலை
இறக்காமல் விட்டதில்லை . அதில் அரபி மொழிக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நபி ஹூத் அலைஹி
வசல்லம் , நபி சாலிஹ் அலைஹி
வசல்லம் ,சுஹைப் அலைஹி வசல்லம்
அவர்கள் மற்றும் நான் என்று தன்னையும் சேத்து
மொத்தம் நான்கு நபிமார்களை அல்லாஹ் அருளியிருக்கிறான் என்றார்கள் .
இதில் நமக்கு ஒரு
சந்தேகம் எழும்பலாம் அல்லாஹ் ஒவ்வொரு சமுகத்தார்க்கும் அல்லாஹ் நபிகளை அனுப்பி இருக்கிறான்
என்பதை நாம் அறியும் பொழுது அனைத்து மொழியிலும் நபியை அருளியிருந்திருக்கிறான் என்றால்
நமது தமிழ் மொழிக்கும் அருளியிருகிரானா என்று . இதில் எனக்கு புலப்பட்டது நமது தமிழ்
மொழி நபி முஹம்மது அலைஹி வசல்லம் அவர்களுக்கு பிறகு நாம் தமிழ் மொழியை உருவாக்கி இருந்தால் அல்லாஹ்
நபிகளை அருள வாய்ப்பில்லை ஆனால் தமிழ் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம்
அவர்களுக்கு முன்னால் உருவானதாக இருந்திருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் அருளி இருப்பான்
ஆனால் நமது மக்கள் அறியாமல் அந்த நபிமார்களைகூட கடவுளாக ஏற்றிருக்கலாம் ஆனால் அதில்
எந்த ஒரு ஆதாரமும் இல்லை . ஆதலால் இன்ஷா அல்லாஹ்
மறுமைநாளில் நாம் அறிவோம் யாரை அல்லாஹ் முந்தய தமிழ் சமூகத்திற்கு நபியாக அருளினான் என்பதை .
மேலும் அல்லாஹ் நபி
ஹூத் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரில் அல்லாஹ் ஒரு சுராவை அருளியிருக்கிறான் . மேலும்
அவர்களது சமூகம்
ஆதுகூடத்தை போன்று
பலசாலி யான கூட்டத்தை அல்லாஹ் படைக்கவில்லை என்று சாட்சி கூறுகிறான் இருந்தும் அவர்கள்
நிராகரிப்பிலே இருந்தார்கள்
ஆது கூட்டத்தை பற்றி
அல்லாஹ் தனது திருமறையில்
" உமது ரட்சகன் ஆது
கூட்டத்தை எவ்வாறு படைத்தான் என்பதை காணவில்லையா
பெரும் பலசாலியான
(துன்களையுடைய ) இறமை
அக்கூட்டத்தினர்கள்
எத்தகையவர்கள் என்றால் (உலகத்தில் உள்ள ) நகரங்களில்
அக்கூட்டத்தினரை போன்று (பலசாலியாக யாரயும் ) படைக்கவில்லை "
அல் பஜ்ர் 89
- 6,7
ஆகவே இவ்வசனத்தில்
மூலம் நமக்கு தெரிய வருவது அல்லாஹ் தனது மனிதப்படைப்பிலேயே ஆதுகூட்டதை போல வேறு யாரையும்
படைக்கவில்லை என்று மேலும் மார்க்க அறிஞர்கள் குறிபிடுகிறார்கள் இந்த ஆது கூட்டத்தார்கள்
அவர்கள் தங்களது இருப்பிடத்தை அவர்கள் மலைகளை குடைந்து அவற்றினுள் வலுவான பாறைகளை தூண்களாய்
அமைத்து அதில் அவர்கள் தங்கியிருந்தார்கள் . அத்தகைய வலுவான கூட்டத்திற்கு நமது தந்தை
நபி ஹூத் அலைஹி வசல்லம் அவர்களை அல்லாஹ் தனது தூதராக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாபியாக
அனுப்பிவைத்தான் அதனை பற்றி அல்லாஹ் எவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை காண்போம்
" மேலும் ஆது (சமுதாயத்தின்)பால்
நாம் அவர்களுடைய சஹோதரர் ஹூதை (நம் தூதராக
அனுப்பி வைத்தோம் ) அவர் கூறினார் என்னுடைய சமூகத்தாரே அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்
அவனைத்தவிர ( வணக்கத்துக்கு உரிய ) நாயன் வேறு இல்லை (வேறு நாயன் உண்டென்று கூறினால்
) நீங்கள் (பொய்க்) கற்பனை செய்பவர்களே தவிர
(வேறு) இல்லை
என்னுடைய சமூகத்தாரே
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும்
கேட்கவில்லை என்னுடைய கூலி என்னை படைத்தானே
அத்தகையவனிடமே தவிர (வேறு யாரிடமும் ) இல்லை
இதை நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா ? "
என்னுடைய சமூகத்தாரே
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் பிளைபொறுப்பு தேடுங்கள்
(அப்பால் ) தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள்
(அவ்வாறு செய்வீர்களாயின் ) மழைகளை உங்கள் மீது தொடர்ச்சியாக பொழியச்செய்வான் பலத்திற்கு
மேல் பலத்தை உங்களுக்கு அதிகரிக்க செய்வான் மேலும் குற்றவாளிகளாக நீங்கள் அவனை புறக்கணித்து
விடாதீர்கள் (என்று கூறினார் )
ஹூது 11-
51,52,53
அதற்கு அவருடைய சமூகத்தார்கள்
ஹூது அலைஹி வசல்லம் அவர்களிடம் தர்கித்ததை பற்றி அல்லா இவ்வாறு விவரிக்கின்றான்
அதற்கு அவருடைய சமூகத்தார்
நிராகரித்து விட்டார்களே அவர்களின் பிரதானிகள் நிச்சயமாக நாம் உம்மை மடைமையில் (ஆழ்ந்து
கிடப்பவராகவே ) காண்கிறோம் நிச்சயமாக உம்மை பொய்யர்களில் (உள்ளவராகவே ) நாம் எண்ணுகிறோம்
என்று கூறினார்
அ(தற்க)வர் என்னுடைய
சமூகத்தாரே என்னிடம் மடமை இல்லை நிச்சயாமாக அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதன் ஆவேன் (என்று கூறினார்
)
அல் அராப்ஹ் -7-
66,67
மேலும் அச்சமூகத்தார்
கூறினார்கள்
அதற்கு அவருடைய சமூகத்தாரில்
இருந்து (அவரை )நிராகரித்து மறுமையின் சந்திப்பை பொய்யாக்கி இவ்வுலக வாழ்கையை சுகபோகங்களை
நாம் யாருக்கு கொடுத்திருந்தோமோ அத்தகைய தலைவர்கள் (இந் நபியை ) காண்பித்து இவர் உங்களை போன்ற மனிதரே
அன்றி வேறில்லை நீங்கள் எதிளிருந்த்து உன்னுகின்றீர்களோ அதையே அவரும் உண்ணுகின்றார்
நீங்கள் குடிப்பதில் இருந்தது அவரும் குடிக்கிறார் " என்று கூறினார்கள்
ஆகவே உங்களை போன்ற
ஒரு மனித்தருக்கு நீங்கள் கீல்படிந்த்தால் அப்பொழுத்து நிட்ச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்கள் என்றும்
நிச்சயமாக நீங்கள்
இறந்து மண்ணாகவும் எலும்பாகவும் ஆகிவிட்டால் நிச்சயமாக நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து
) வெளிப்படுத்தப்படுகிரவர்கள் என்று அவர் உங்களுக்கு
வாக்குறுதி அளிக்கிறாரா ?
உங்களுக்கு வாக்குருதியளிக்கப்பட்டு
(எவ்வாறு நடந்த்தேரும் ) அது வெகு தொலைவு
(அது ) வெகு தொலைவு என்றும்
இது நம்முடைய உலக
வாழ்க்கையே தவிர வேறு எதுக்கும் இல்லை (இதிலேயே ) நாம் இறந்துவிடுவோம் (இப் பொழுது
) நாம் உயிரோடு உள்ளோம் ஆனால் நாம் இறந்த்தபின்னர் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படபோகிறவர் அல்லர் (என்றும் )
இவர் அல்லாஹ்வின்
மீது பொய்யை கற்பனை செய்து கூறும் ஒரு மனிதரே தவிர வேறு இல்லை இவரை நாம் நம்பக்கூடியவர்கலாகவும்
இல்லை (என்று கூறினார்கள் )
அல் மூஹ்மினூன் 23-33,34,35,36,37,38
அல்லாஹு அக்பர் இந்த
வசங்களை ஒரு முறைக்கு இருமுறை மீண்டும் படித்துப்பாருங்கள்
இன்றளவில் நம் சமூதாயத்தார்களே இந்த விசியங்களில் அலட்சியமாக இருக்கிறார்கள் அல்லா பாதுகாப்பானாக இன்றளவில் சில பேர் குறிப்பிடுகிறார்கள் நாம் மண்ணாக எலும்பாக
போய்விடுவோம் அதற்கு பின் வாழ்க்கை எண்பது
இல்லை என்று ஔதுபில்லாஹ் அல்லாஹுவின் அந்த
நாள் மிக கொடுமையான நாள் ஆனால் நாம் அதனை அலட்சியமாக கருதுகிறோம் மேலும் இவ்வசனகளை ஹூத் அலைஹி வசல்லம் அவர்களின் சமூகத்தை போல் நம்முடைய சமூதாய
மக்களும் பொய்யாக்க முற்படுகிறார்கள் அல்ல்ஹுவின்
வேதனையை அஞ்சிக்கொள்ளுங்கள் நண்பர்களே அல்லா கருணை மிக்கவந்தான் ஆனால் பளிவாங்குவதில் மிக தீவிரம்மானவன் அல்லாஹ் எங்களை பாதுகாக்க நீயே போதுமானவன் எங்களை வழிநடத்த நீயே போதுமானவன் எங்களை உன்வழியில் நல்வளிப்படுத்துவாயாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
மேலும் பலமாரியாக
நமது தந்தை ஹூத் அலைஹி வசல்லம் அவர்களுக்கு அவர்கள் தொல்லை கொடுக்க ஆரமித்தார்கள் அந்த
மக்கள் நபி ஹூதை பார்த்து கூறினார்கள் இந்த வசனங்கள் அல்லாஹு அக்பர் ஒவ்வொரு மூமீனும்
அறியவேண்டிய ஒன்று . அதனை பார்போம்
" எங்களுடைய தெய்வங்களில்
சில கேட்டைகொண்டு உம்மைப் பிடித்துகொண்டது என்பதை தவிர நாங்கள் (வேறு எதையும்) கூறுவதற்கில்லை
(என்று கூறினார்கள் ) அதற்கு (ஹூத் அலைஹி வசல்லம் அவர்கள் ) நிச்சயமாக நான் அல்லாஹுவை
சாட்சியாக்குகிறேன் இன்னும் நிச்சயமாக நான் (அவனையன்றி ) நீங்கள் இணை வைப்பவைகளிருந்து
விலகிக்கொள்கிறேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாயிருங்கள் " என்று கூறினார்
அவனையன்றி (நீங்கள்
இணை வைப்பத்திளிருந்த்து நான் நீங்கி கொண்டேன் ) ஆகவே நீங்கள்
அனைவரும் எனக்கு செய்யவேண்டிய சூழ்ச்சியை செய்துவிடுங்கள் பின்னர் நீங்கள் எனக்கு அவகாசம் (ஏதும் ) அளிக்க
வேண்டாம் " என்று கூறினார்கள்
நிச்சயமாக என்னுடைய
ரட்சகனும் உங்களுடைய ரட்சகனுமான அல்ல்ஹுவின்
மீது நான் நம்பிக்கை வைத்துவிட்டேன் (பூமியில் படைத்திருக்கும் ) எந்த ஜீவராசியாயினும் அதன் முன் நெற்றி ரோமத்தை அவன் பிடித்து வைத்திருக்கிறான்
. நிச்சயமாக என் ரட்சகன் நேரான வலியின் மீதிருக்கிறான் (என்றும் )
நீங்கள் என்னை புரக்கனிபீர்கலாயின்
நான் உங்களிடம் எதனை கொண்டு அனுப்பபட்டேனோ அதனை நிச்சயமாக சேர்பித்து வைத்து விட்டேன்
(உங்களை அழித்து ) உங்களை அல்லாத வேறு சமூகத்தை என் ரட்சகன் (உங்கள் இடத்தில் ) பகரமாக்குவான்
(இதற்காக ) நீங்கள் அவனுக்கு எப்பொருளாலும் (யாதொரு ) தீங்கையும் செய்துவிட முடியாது
நிச்சயமாக எனது ரட்சகன் யாவற்றையும் பாதுகாப்பவன்
ஹூத் 11-
54,55,56,57
மேலும் வரலாற்று ஆசிரியர்கள்
குறிப்பிடுகிறார்கள் ஹூத் அலைஹி வசல்லம் அவர்களை பலமாதிரியாக துன்புறுத்த தொடங்கிவிட்டார்கள்
மேலும் அல்லாஹுவிடம் அவர்கள் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார்கள் மேலும் அவர்கள்
எல்லா சமூகத்தின் நிராகரிப்போர் கூறுவதை போல் நீங்கள் எங்களுக்கு வாக்களித்த அந்த தண்டனையை
எங்களிடம் கொண்டு வாரும் என்று கூற ஆரமித்துவிட்டர்கள் . அதற்கு நமது தந்தை ஹூத் அலைஹி
வசல்லம் அவர்கள் தண்டனையா வேணும் அல்லாஹ் தண்டனையை கொடுக்க நாடிவிட்டால் அதை தடுக்க
யார் இருக்கிறார்கள்
நபி ஹூத் அலைஹி வசல்லம்
அல்லாஹுவிடம் பிராத்தித்தார்
" எனது ரட்சகனே இவர்கள்
என்னை பொய்யாக்கி விட்டதன் காரணத்தால் நீ எனக்கு உதவி செய்வாயாக என்று பிரத்திதார்
அதற்கு அல்லாஹ்
" சிறிது காலத்தில் நிச்சயமாக அவர்கள் கைசேதத்தை உடையவராக ஆகிவிடுவார்கள் என்று (அல்லாஹுவாகிய )அவன் கூறினான்
அல் மூஹ்மினூன் 23-
38,39
இதன் பின்னணியில்
நமக்கு ஒரு கேள்வி எழும்பலாம் அல்லாஹ் அனைத்து சமூகத்தையும் கூட்டம் கூடமாக அளித்தான்
என்கிறான் நாம் ஒன்னும் அந்த முன் சமூகத்துக்கு சளைத்தவர்கள் இல்லை ஒவ்வொரு சமூத்தாரிடம்
உள்ள தனிப்பட்ட அதாபிர்க்கு காரணமாக இருந்த அந்த மான கேடான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்
பாதுகாப்பானாக நம் சமூகத்திலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது அதற்கு உதாரணம் அல்லாஹுவை
புறக்கணித்தவர்கள் இவ்வுலகில் இல்லையா ? ஆது கூட்டத்தை போல் கர்வம் கொண்டவர்கள் இப்பூமியில் இல்லையா என்ன , லூத் அலைஹி வசல்லம் அவர்களின் சமூகத்தை போல் ஓரினச்சேர்க்கை
இப்பூமியில் இல்லையா என்ன . கபுர்களை மற்றும் முன்னோர்களை வணங்கியதுபோல் இன்றளவில்
வாழவில்லையா என்ன , மது பழக்கங்கள் இல்லையா என்ன விபச்சாரங்கள் இல்லையா என்ன . பிரௌனின் ஆட்சியை போல் ஹாரூனின் ஆட்சியைபோல் அநீதி மக்களுக்கு இளைக்க படவில்லையா என்ன உயர்ந்த மக்கள் தாழ்ந்த மக்கள் என்று பாகுபாடு இல்லையா
என்ன ? இன்னும் பல விசியங்கள் உள்ளது இவ்வளவும் இருந்தும்
அல்லாஹ் நம்மை அளிக்காமல் விட காரணம்தான் என்ன
அதற்கு ஒரே காரணம்
நமது நபி முஹம்மது சல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமே அல்லாஹு அக்பர் நமது ஹபீப் முஹம்மது சல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு நம்
மீது உள்ள பாசம் இன்று அதைகூட அறியாத மடையர்களாக
இருக்கிறோம் என்றால் அல்லாஹ் பாதுகாப்பானாக அல்லாஹ் உங்களை நரகத்திற்கு சாட்டிவிட்டன் என்பதே உண்மை அல்லாஹ் பாதுகாப்பானாக
" அல்லாஹும்ம அஜிர்னி மினன்னார் "
யா அல்லாஹ் எங்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பாயாக ஆமீன் . இப்படி நம்மீது
அவர்களுக்கு எவ்வளவு பாசம் என்பதை அவர்களது
துஆ மட்டுமே அல்லாஹ் பொறுத்துக்கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது நம் மீது உள்ள பாசத்தை
அல்லாஹ் அவனது குரானில் குறிப்பிடுகிறான்
"நபியே உம்மை விசுவாசம்
கொள்பவர்களாக இல்லாததன் காரணமாக உம்மை நீரே மாய்த்து கொள்வீர்கள் போலும் "
அஸ் சூஅரா - 26-3
மாஷா அல்லாஹ் நமது
கண்மணி நாயகத்தின் கருணையை அல்லாஹ் பலஇடங்களில் குறிப்பிடுகிறான் மேலும் உங்களுக்கு தாயுப் நகரம் அல்லாஹு அக்பர் அம்மக்கள் நமது கண்மணி
நாயகம் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களை கல்லால் அடித்தார்கள் அதுசமயம் மலக்குகள் வந்து
நாயகமே ஒரு வார்த்தை கூறுங்கள் இந்த மக்களை அழித்துவிடுகிறோம் ஆனால் நமது கருணை நபி
சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இவர்கள் ஈமான் கொள்ளாவிட்டாலும் இவர்களது பிட்சலங்கள்
ஈமான் கொள்வார்கள் என்று கூறிய அந்த தருணம் அல்லாஹ் அக்பர் கலங்காத ஒருகண் கூட இவ்வுலகில்
இருக்காது என்பதே சத்தியம்
இந்த நபியின் உம்மத்தாக
பிறக்க நாம் அல்லாஹுவிர்க்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும் . அல்லாஹ்
எங்களது பாவங்களை மன்னித்து எங்களை நபி முஹம்மதின் உம்மத்தாக மாத்துவாயாக அவர்களது
வழிமுறையை பின்பற்ற அருள் புரிவாயாக ஆமீன்
மேலும் நம் தலைப்பிற்கு
செல்வோம் அல்லாஹ் அது கூட்டத்தை வேதனையை இறக்கினான் அல்லாஹு அக்பர் அவர்களது வேதனை
அல்லாஹ் பாதுகாப்பானாக மிக பெரும் பேய்காற்றை அல்லாஹ் அனுப்பி எவ்வளவு பலசாலி யான கூட்டம்
என்பதை அல்லாஹுவே விவரிக்கிறான் மேலும் அவர்களையே அல்லாஹ் காற்றை வைத்து அவர்களை அப்படியே
தூக்கி தலைகீழாக தரையில் அடித்து அவர்களை அளித்தான் இந்த தண்டனையை பற்றி அல்லாஹ் அவனது
திருமறையில் குறிப்பிடுகிறான்
இன்னும் (ஹூத் நபியின்
கூட்டத்தார்கலாகிய ) ஆது பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கொண்ட கொடுங்காற்றை கொண்டு அழிக்கப்பட்டனர்
ஏழு இரவுகளும் எட்டு
பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை வசப்படுத்தி (வீச செய்து ) இருந்தான் .(நபியே
நீ அப்பொழுது அங்கு இருந்திருந்தால் )ஆகவே அக்கூட்டத்தினரை நிச்சயமாக அவர்கள் அடிபாகங்கலோடு
சாய்ந்து கிடக்கும் ஈச்ச மரங்களைப் போன்று பிணங்களாய் நீ காண்பீர்
அல் ஹாக்கா 69-6,7
மேலும் அல்லாஹ் அவனின்
அருளால் நபி ஹூத் அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களை பின்பற்றிய நன் மக்களையும் அல்லாஹ்
காப்ற்றியத்தை பத்தி அல்லாஹ் தனது குரானில் எவ்வாறு குரிபிடுகிறான் என்றால்
மேலும் (அவர்களுக்கு
தண்டனைக்கு உரிய ) நம்முடைய உத்தரவு வந்தபொழுது ஹூதையும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களையும் நம்மிடமிருந்துள்ள அருளால் நாம் காப்பாற்றிவிட்டோம்
கடுமையான வேதனையிளிருந்த்து அவர்களை காப்பாற்றிவிட்டோம்
ஹூத் 11-58
அல்லாஹ் கூறுகிறான்
அத்தகைய பலசாலியான ஆதுகூட்டதாருக்கு கேடுதான் என்று அல்லாஹ் தனது திருமறையில் சாட்சிகூருகிறான்
.
அல்ஹம்துளிள்ளாகிர் ரப்பில் ஆலமீன்
இத்துடன் ஹூத் அலைஹி
வசல்லம் அவர்களின் வரலாறு நிறைவு பெறுகிறது . இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் மற்ற
நபிமார்களை பற்றி காண்போம், இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே
உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை
தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய
இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நசராநிகளிடம் போர் புரியும் என் தாய்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கு குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியா வில் பர்மா வில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முழுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே படித்து
உங்களது நண்பர்களுக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில்
இனைய வேண்டுகோள்விடுங்கள் அல்லாஹ் ரக்மதுசெய்வானாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
0 comments:
Post a Comment