பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர்
ரஹீம்
" அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களது
அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..
நபர்களே இன்றையதினம்
இன்ஷா அல்லாஹ் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி பாப்போம், இவர்களை பற்றி நாம் படிக்கவேண்டும் என்றால் அல்லாஹுஅக்பர்
ஹல்ரத் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் இவர்களை பற்றி அறியாத மக்களே இல்லை
என்ற அளவிற்கு அல்லா இவருடைய வாழ்வை அவன் அருளிய அனைத்து வேதங்களிலும் குரிபிட்டிருக்கிறான்
மேலும் ஹல்ரத் நபி இபுராஹிம்
அலைஹி வசல்லம் அவர்களை யூதர்களும் கிறிஸ்துவர்களும் அவர்களுக்கு சொந்தமானவர்கள்
என்று வாதிடுகிறார்கள் மேலும் யூதர்கள் நபி
இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் யூதராகதான்
வாழ்ந்தார்கள் என்றும் கிறிஸ்துவர்கள் அவர் ஒரு கிறிஸ்துவராக வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்
ஆனால் நம்மை படைத்த அல்லா கூறுகிறான் நபி
இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு உண்மையான
முஸ்லீமாக வாழ்ந்தார்கள் என்று மேலும் அல்லாஹ்
நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை
கலீலுல்லாஹ் (அல்ல்ஹுவின் உற்ற நண்பன் ) என்ற பெயரை பெற்றவர் மேலும் இவருக்கு அபு லுஇப்பான்
(luhifaan) விருந்தாளிகளின் தந்தை என்ற புனை பெயரும் உண்டு
.
மார்க்க அறிஞர்கள்
குறிப்பிடுகிறார்கள் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம்
பாபிலோன் என்ற இடத்தில் பிறந்தார்கள் இவருடைய
தந்தை பெயர் ஆசர் .இவருக்கு மூன்று ஆண்குழந்தைகள்
பிறக்கிறார்கள் அவர்களில் மூத்தவர் நாகூர் இரண்டாவதாக நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் மூன்றாவதாக ஹாறான் என்றவர்களும் மேலும் இந்த ஹாறான்
என்ற அந்த சஹோதரருக்கு லூத் அலைஹி வசல்லம் என்ற ஆன் மகனும் சாரா என்ற பெண் மகளும் பிறக்கிறார்கள்
இவர்கள் சிறு வயதிலேயே இவர்களது தந்தை ஹாறான் மறைந்து விடுகிறார்கள் மேலும் நபி இபுராஹிம்
அலைஹி வசல்லம் அவர்களது தம்பியுடைய மகளை திருமணம் செய்துகொண்டார்கள் என்று மார்க்க
அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்
மேலும் அல்லாஹ் இவர்களது
வரலாற்றில் நமக்கு அல்ஹம்துலில்லாஹ் எண்ணற்ற படிப்பினையை வைத்திருக்கிறான் மேலும் அல்லாஹ்
கூறுகிறான் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை இந்த மனித சமூகத்திற்கு இமாமாக ஆக்கி
இருக்கிறோம் என்று மேலும் நாம் அறிந்தது நமது கண்மணி நாயகம் முஹம்மது சள்ளலாஹு அலைஹி
வசல்லம் அவர்கள் உலகத்தில் அனுப்பப்பட்ட அணைத்து நபிகார்களுக்கும் இமாமாக அருளபட்டவர்
என்று மேலும் நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞ்சர்கள்
குறிப்பிடுகிறார்கள் எனக்கு இமாமாக ஆசானாக நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள்தான் என்று . இந்த நபி இபுராஹிம்
அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அனைவருமே அல்ஹம்துலில்லாஹ்
ஒரு சிறுதுளி அளவிற்காவது அறிந்திருக்கிறோம்
, அறியாதவர்கள் அவர்களே
கேட்டுகொல்லட்டும் அவர்கள் யார் என்று . இவர்கள் வழிமுறையை நாம் இவரை அறியாமலேயே பின்பற்றுகிறோம்
என்பதே உண்மை என் என்றால் மீசையை கத்தரித்து தாடியை வளைப்பது , நேகங்களை வெட்டுவது மேலும் கத்னா செய்வது குர்பானி
என்ற தியாக உணர்வை அல்லாஹுவிர்காக படைப்பது , விருந்தினருக்கு உணவளிப்பது , போன்ற எண்ணற்ற நற்குணங்கள் இவரிடம் இருந்து நமக்கு
படிப்பினையாக அருளி இருக்கிறான்
இவர் பாபிலோனில் தனது
குடும்பத்தோடு வசித்து வந்தார் மேலும் இவரது தந்தை ஆசர் ஒரு சிலை வணங்கியாக வாழ்ந்து
வந்தார் மேலும் இவரது தந்தையை பற்றி மார்க்க அறிஞர்கள் கூரிபிடுகிரார்கள் இவர் சிலைவனக்கதின்
பூசாரியாக இருந்தார் என்று . மேலும் இவர் தனது குடும்பத்தோடு கண்ஹான் என்ற ஊருக்கு
இடம்பெயந்து சென்றார்கள் இன்றளவில் கண்ஹான் என்ற இடம் வேச்ட்பான்க் (westbank)
என்றழைக்க படுகிறது . மேலும் இவர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
அப்பொழுது தனது ரட்சகன் யார் என்பதை விளங்க ஆசை கொண்டவர்களாக ஒரு நாள் நபி இபுராஹிம்
அலைஹி வசல்லம் ஆவர்கள் இரவில் ஒரு ஒளிருட்டும்
நட்சத்திரத்தை கண்டார்கள் அப்பொழுது இந்த நட்சத்திரம்தான் எனது ரத்சாகனாக இருக்க கூடும்
என்று நினைத்தார் சிறிது நேரத்தில் அது மறைந்தது . மறைந்தது எப்படி எனக்கு ரப்பாக இருக்க
இயலும் என்று என்னிகொண்டார் மேலும் ஒளிருட்டும்
குளுமையான சந்திரனை கண்டார் நிச்சயமாக இதுதான் எனது ரப்பாக இருக்கும் என்று கூறினார் அதுவும் காலையில் மறைந்ததும் , மறைந்தது எப்படி ரட்சகனாக இருக்க கூடும் என்று கூறினார் மேலும் சிறுது நேரத்தில்
மிக பிரகாசமாக ஒளியை வெளிபடுத்திகொண்டு வெளி வந்த சூரியனை கண்டு நிச்சயமாக இதுதான்
என் ரப்பாக இருக்க கூடும் இதுதான் பெரிய ரப்பு என்று கூறினார் மாலையானதும் சூரியனும்
மறைந்துவிட்டது . அப்பொழுது உணர்த்து கூறினார் இதுவும் எனது ரப்பு அல்ல வானங்கள்
மற்றும் பூமியை படைத்த ஏக இறைவனை பக்கமே எனது முகத்தை நான் திருப்புகிறேன் நான்
இனைவைபவனாக இல்லை என்று கூறினார் .
மேலும் அல்லாஹ் நபி
இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நபித்துவத்தை
அருளியபிறகு தனது பணியை முதலில் தனது தந்தையிடம் இருந்தே தொடங்கினார் .
தனது தந்தையிடம் எனது
தந்தையே நீங்கள் எதனை வணகுகிரீர்கள் என்று வினவினார் அதற்கு அவர் எனது மூதாதையர்கள்
எதனை வணங்கினார்களோ அதனை நானும் வணகுகிறேன் . அதற்கு நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் எதையும் கேட்க சக்தியற்ற அந்த சிலைகலையா வணங்குகிறீர்கள் எதையும் பார்க்க
சக்தியில்லாத உங்களுக்கு வரும் தீங்கை தடுக்க சக்தியில்லாத அதனை வந்குரீர்களா நீங்கள்
ஏக இறைவன் ஒருவனான அல்லாஹுவின் பக்கமே உங்கள் முகங்களை திருப்புங்கள் என்று கூறினார்
. அதற்க்கு நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களின்
தந்தை என்ன இப்ராஹீமே எனது கடவுளை பலிக்கிரீரா என்று கேட்டார் நீ இந்த செயலைவிட்டு
நீங்கவில்லை என்றால் நிச்சயமாக நான் உன்னால் கல்லால் அடித்து கொன்று விடுவேன் என்று
தந்தை மகனை பார்த்து கூறினார் அதற்கு நமது பொறுமைக்கு சிகரமான நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு சாந்தியை (அமைதியை
) உண்டாக்குவானாக நிச்சயமாக நீங்கள் எதனை வணங்குரீர்களோ அதில் இருந்து நான் விலகி கொள்கிறேன் நிச்சயமாக
இணைவைக்க கூடியவனாக நான் இல்லை என்று தனது தந்தையுடன் கூறினார் மேலும் அவர் கூறினார் எனது தந்தையே உங்களுக்காக
நான் எனது இரட்சகனிடம் நிச்சயமாக பாவமன்னிப்பு தேடுவேன் என்று கூறினார் .
பிறகு அங்கு உள்ள மக்களுக்கு பிரச்சாரம் செய்ய தொடங்கினார்
பலவாரியாக பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் அங்கு உள்ள மக்கள் வித்தியாசமாக நட்சத்திரங்களை தனது ரட்சகனாக ஏற்றிருந்தார்கள்
அவர்களிடம் தீனை எத்திவைதார்கள் ஆனால் அவர்கள்
அதனை ஏற்கவில்லை . பிறகு சிறுது காலம் அங்கிருந்து தனது சொந்த ஊரான பாபிலோனுக்கு வந்தார் அங்கு உள்ள
மக்கள் அனைவரும் சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தார்கள் அதனை கண்ட நபி இபுராஹிம்
அலைஹி வசல்லம் அவர்கள் மிகவும் கோபமுற்றார்
நபி இபுறாஹீம் அலைஹி
வசல்லம் அவர்கள் தன் சமூகத்தாரை நோக்கி
நீங்கள் எதனை வணன்குரீர்கள்
என்று கேட்டார் அதற்கு அவர்கள்
நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்
என்று கூறினார்கள் மேலும்
நபி இபுறாஹீம் அலைஹி
வசல்லம் அவர்கள் மக்களிடம் நீங்கள் அழைக்கின்ற சமையத்தில் அந்த சிலைகள் உங்களுக்கு
செவியெர்கின்ரதா அல்லது நீங்கள் அதனை வணங்கினால் உங்களுக்கு ஏதேனும் பலன்தருகிறதா இல்லை
நீகள் வணங்காவிட்டால் உங்களுக்கு அது ஏதேனும் இடையூறு செய்கிறதா என்று கேட்டார் அதற்கு
அம்மக்கள் இல்லை இல்லை எங்கள் மூதாதையர்கள் இவ்வாரே நாங்கள் வணங்க கண்டோம் அவ்வாரே
நாங்களும் வணங்குகிறோம் என்று கூறினார்கள் .
அதற்க்கு நபி இபுறாஹீம்
அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயமாக நீங்களும் உங்களது மூதாதையர்களும் எதனை வணங்கி வந்தீர்களோ
அவைகள் நிச்சயமாக எனக்கு எதிரிகள் அகிலத்தாரின் ரட்சகன் அல்லாஹுவை தவிர அவன் எத்தகையவன்
என்றால் அவனே எனக்கு உணவளிக்கிறான் அவனே எனக்கு குடிக்க நீரையும் தருகிறான் மேலும்
நான் நோயுற்றால் அவனே என்னை குணப்படுத்துகிறான் மேலும் அவன் எத்தகையவனென்றால் அவனே
என்னை இறக்க செய்வான் பின்னர் மறுமையில் உயிர்பெற செய்வான் என்று கூறினார்கள்
ஆகவே எனது சமூகமே
ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள் .என்று கூறினார் அதற்கு அம்மக்கள்
எங்களது மூதாதையர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதன் வழியிலே நாங்களும் செல்கிறோம்
என்று கூறினார்கள் அதற்கு அம்மக்களிடம் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயம்மாக அல்லாஹ் என்னை நேர்வழியில்
செலுத்திவிட்டான் நீங்கள் உங்களை படைத்தவனை எதை கொண்டு இனைவைகின்றீர்களோ நிச்சியமாக
அதனை நான் பயப்படமாட்டேன் நிச்சயமாக என் ரட்சகன் ஒவ்வொரு பொருளிலும் கூர்ந்து கவனிப்பவன்
இதனை நீங்கள் அறிய வேண்டாமா என்று கூறினார்
மேலும் நிச்சயமாக
உங்களுக்கு யாதொரு அத்தாட்சிகளையும் இறக்கி வைக்காமளிருக்க அந்த சிலைகளை நீங்கள் அல்லாஹுவிர்க்கு
இனைவைதிருப்பதைப்பற்றி சிறிது நீங்கள் அஞ்சாமல் இருக்க நீங்கள் இனைவைதிருப்பதை நான்
எவ்வாறு பயப்படுவேன் நாம் இருபிரிவினர்களும்
அச்ச பட தகுதியானவன் யார் என்பதை நீங்கள் அறிந்தவராக இருந்தால் கூறுங்கள் என்று
கூறினார்.
மேலும் அல்லாஹுவை
அன்றி நீங்கள் வணங்கும் அனைத்தும் நீங்கள் உங்கள் கைகளால் வடிவமைத்த சிலைகளே அன்றி வேர் இல்லை அல்லாஹுவை அன்றி நீங்கள்
வணங்குவது உங்களுக்கு உணவளிக்க சக்தி பெறமாட்டாது ஆகவே அவனிடமே உனவைதேடுங்கள் அவனையே
வாங்குங்கள் அவன் பக்கமே நீங்கள் மீளுங்கள் என்று கூறினார்
மேலும் நீங்கள் என்னை
பொய்யாக்கினாள் அதனை பற்றி எனக்கு கவலை இல்லை ஏன் என்றால் எனக்கு முன்னால் வந்த அணைத்து
நபிமார்களையும் அவர்களது சமூகத்தார்கள் பொய்யாக்கினார்கள் எல்லா நபி மார்களுக்கு அல்லாஹ்
விட்ட கட்டளை அவனின் தூதை பகிரங்கமாக எத்திவைபதே தவிர வேறில்லை
மேலும் அவர்கூறினார்
நிச்சயமாக நீங்கள் இந்த சிலைகளை விட்டு செல்லும்பொழுது உங்கள் சிலைகளுக்கு திண்ணமாக
நான் சதி செய்வேன் என்று கூறினார்
அதன் படி நபி இப்ராஹிம்
அலைஹி வசல்லம் அதற்காக சமயம் பார்த்துகொண்டிருந்த நிலையில் ஒரு நாள் தனது தந்தை அவரிடம்
இப்ராஹீமே எங்களுடன் வா அனைவரும் திருவிழா விற்கு போய்வரலாம் என்று கேட்டார் அதற்கு
நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாழ்நாளின் முதல் பொய்யாக எனக்கு உடம்பு
சரியில்லை தந்தையே என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார் . நம் பார்வையில் இதுவெல்லாம்
பொய்யா இது பொய்யென்று எண்ணினால் நாம் ஒவ்வொருநாளும் லட்சகணக்கான பொய் சொல்லிகொண்டிருக்கிறோம்
அப்படிதானே . ஆம் இந்த பொய்யுக்காக நபி இப்ராஹிம்
அலைஹி வசல்லம் அவர்கள் மறுமைநாளில் அனைவரும் கேள்விகனக்கிர்காக நிறுத்திவைக்கப்பட்ட
நிலையில் அல்லா கேள்வி கணக்கு செய்யாமல் காக்க வைத்துவிடுவான் அப்பொழுது அந்த மக்கள்
அனைவரும் ஒன்றிணைந்து ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுடன்
செல்வர்கள் எங்கள் தந்தையே அல்லாஹுவிடம் பரிந்துரை செய்யுங்கள் சீக்கிரம் கேள்விகனக்கு
ஆரம்பம் செய்ய கோருங்கள் என்று கூறுவார்கள் அதற்கு நமது தந்தை நானே அல்லாஹ் நெருங்க
வேண்டாம் என்று சொன்ன கட்டளையை மீறி அந்த மரத்தை
நெருங்கி விட்டேன் ஆதலால் அதற்காக அல்லாஹ்
என்னை பிடித்துவிடுவானோ என்று அஞ்சி பாவ மன்னிப்பு தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறுவாராம் அதே போல் ஒவ்வொரு நபியிடமும் மக்கள்
போகும்பொழுது அனைவரும் ஒரு குறை கூறி அனுபிவிடுவார்கலாம் அவர்கள் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் செல்லும்
பொழுது அவர் கூறுவாராம் நான் என் வாழ்நாளில்
இரண்டு மூன்று பொய்யை கூறிவிட்டேன் அதார்க்காக அல்லாஹ் என்னை தண்டித்துவிடுவானோ
என்று அஞ்சி பாவ மன்னிப்பு தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அனுப்பி விடுவாராம் அனைவரும்
அனுப்பி இறுதியாக நமது கண்மணி நாயகம் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் வந்த
பொழுது நமது கருணை நபி அல்லாஹுவின் அருசிர்க்கு கீழ் சுஜூதில் விழுந்து விடுவார்கள்
அல்லாஹ் எவ்வளவு காலம் நாடுகிறானோ அவ்வளவு காலம் சுசூதிலே போட்டுவிடுவான் பிறகு அல்லாஹ்
நபி முஹம்மதே உங்கள் தலையை உயர்த்துங்கள் நீங்கள் விரும்பியதை தருகிறேன் உங்கள் பரிந்துரையை
ஏற்கிறேன் என்று கூறுவான் அப்பொழுது நமது நாயகம் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் யா
அல்லாஹ் கேள்விகணக்கை அரம்பிபாயாக மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்று மாஷா அல்லாஹ்
எல்லா நபிமார்களும் நம்மை விட்டுவிட்டாலும் நமது நாயகம் நம்மை விடுகிறவர் அல்ல என்பதை நாம் என்றாவது உணர்ந்திருக்கிறோமா அல்லாஹ்
எங்களது நபியை நீ மேல்மேலும் கண்ணியபடுத்துவாயாக ஆமீன் இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி
வசல்லம் அவர்கள் தனது இந்த சிறு பொய்யிர்காக அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கோரி கொண்டிருப்பார்கள்
.
பின்பு அவர்கள் ஊர்மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு சென்றவுடன் நமது தந்தை நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த சிலைகள்
இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் பிறகு அங்கு உள்ள சிலைகளிடம் இந்த உனக்காக தானே இவர்கள்
உணவுகளை படையலாக வைத்திருக்கிறார்கள் இந்த சாப்பிடு என்று அந்த சிலைகளிடம் கூறினார்கள்
உங்களைத்தானே இந்த மக்கள் கடவுள் என்று நம்பிக்கொண்டு
இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு சிலையாக அடித்தார்கள் பேசு பேசு என்று பிறகு அணைத்து
சிறிய சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்து விட்டார் பிறகு
அம்மக்கள் அந்த சிலைகளை கண்டவுடன் கோவம் தலைகேறி அனைவரும் இதனை யார் செய்திருப்பார்கள்
என்று வினவ ஆரம்பித்துவிட்டார்கள் பிறகு அவர்களில் சிலபேர் இப்ராஹிம் என்ற வாலிபன்
தான் இவ்வாறு செய்திருப்பான் என்று முடிவு
செய்து நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து இதனை நீதானா செய்தாய் என்று
வினவினார்கள்
அதற்க்கு நமது தந்தை
நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் என்ன என்னிடம் கேட்கிறீர்கள் உடைபட்டு கிடக்கும்
உங்கள் கடவுல்களிடமே கேளுங்கள் எனக்கு என்னமோ இந்த பெரிய சிலையை வைத்துவிட்டு நீங்கள்
சிறிய தெய்வங்களை வணங்குகுவதால் அந்த பெரிய சிலை நீங்கள் இல்லாத சமையம் பார்த்து அந்த
சிறிய சிலைகளை எல்லாம் உடைத்துவிட்டது என்று நினைக்கிறன் அதற்கு அக்கூட்டத்தார்கள்
அது எப்படி உடைக்கும் என்று வினவினார்கள் அதைத்தானே இவ்வளவு நாளா நான் உங்களிடம் கேட்டுகொண்டிருந்தேன் இப்பொழுது நீங்களே அவ்வாறு கூறுகிறீர்கள் என்று
கூறினார் பிறகு அவர்கள் கோபம் தாளாமல் அரசனிடம் இவ்வழக்கு சென்றுவிட்டது அப்பொழுது
நம்ரூத் என்ற அரசனிடம் நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கொண்டு சென்றார்கள்
அம்மக்கள் அந்த நம் நம்ரூத் என்ற மன்னனை பற்றி நபி சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் கூறியதாக
உலமாக்கள் கூறுகிறார்கள் உலகத்தையே ஆண்டவர்கள் நான்கு பேர் அதில் இரண்டுபேர் முஸ்லிம்
இரண்டுபேர் மற்றவர்கள் அதில் ஒருவர் நம்ரூத்
மற்றொருவர் புக்த நசர் முஸ்லீம்களில் ஒருவர்
சுலைமான் அலைஹி வசல்லம் மற்றொருவர் சிக்கந்தர்
துல்கர்னைன் (alexandar) என்று அழைக்க படுகிறார்
.
இவ்வாறு உலகத்தை ஆண்ட
மன்னன் நம்ரூத் என்ற கொடுகோல் மன்னனிடம் இந்த வழக்கு வருகிறது அப்பொழுது அந்த மன்னன்
இந்தியாவில் இன்று நடப்பதுபோல் விசாரணையே கிடையாது
அனைத்து மக்களின் மனத்திருப்திக்காக இன்று
அப்சல் குரு மற்றும் இதுவரை வெளிவராத பல முஸ்லீம்களை எவ்வாறு செய்தார்களோ அதை போல்
அந்த மன்னன் ஒரு பெரிய தீகுண்டத்தை வளர்த்து அதில் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை
அதில் எரிய விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தார்கள் . அந்த தீக்குண்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது
என்றால் மக்கள் அனைவருக்கு அறிவிப்பு செய்து இப்ராஹீமை தீயில் இட மக்கள் அனைவரும் விறகுகள்
சுமந்து வந்து அதில் எரிய வைக்க முடிவு செய்தார்கள் .
அவ்வாறு ஒவ்வொருவரும்
தனக்கு இயன்ற அளவிற்கு விறகுகளை சுமந்து தீயை எரியவிட்டவுடந்தான் தெரிகிறது அது கிட்ட
சென்றாலே அனைவரையும் கரிக்கி விடும் என்று எவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை
தீயில் எறிவது என்று முடிவு செய்து கைசான் என்ற அந்த அரசாட்சியின் அரசவை கவிஞன் மஞ்சநீக் என்ற கருவியை உருவாக்கினான்
அதில் வைத்து அவர்களை அந்த தீயில் எரிய முடிவு செய்தார்கள் .
அந்த கருவியில் நபி
இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கட்டியபொழுது ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம் அவர்களிடம்
வந்து நபியே எதாவது உதவி வேணுமா சொல்லுங்க என்று கேட்டார்கள் ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம்
அவர்கள் எதகயவர்கள் என்றால் அவருக்கு அல்லாஹ் அறுபது ரெட்க்கைகளை கொடுத்திருந்தான் அதில் ஒரு ரெட்க்கையை வைத்து அதன் நுனியில் இந்த பூமியை அப்படியே திருப்பி
போடும் அளவிற்கு ஆற்றல் உடையவர்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். மாஷா
அல்லாஹ் அத்தகைய மலக்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்கிறார்கள் ஆனால் அல்லாஹு அக்பர் அவர் கூறிய வார்த்தை
"ஹஸ்புனல்லாஹ் நாமுள் வக்கீல் " என்னை பொறுபேற்க அல்லாஹுவே போதுமானவன் என்று
கூறி ஜிப்ரகீலே நீயும் அல்லாஹுவின் படைப்பு நானும் அல்லாஹுவின் படைப்பு படைப்புக்கு
படைப்பு உதவி செய்ய இயலாது நம்மை படைத்தவன் உதவி செய்வான் என்று கூறினார்கள்
மேலும் அந்த கருவியை
இயக்கியவுடன் அதனை இயக்கிய அந்த அரசவை கவிஞன் பூமி விரிந்து அதற்குள் புகுந்துவிட்டான்
அவன் கியாமத் நாள் வரை ஒவ்வொரு அடியாக உள்ளே சென்றுகொண்டிருப்பான் என்று நமது நபி சள்ளலாஹு
அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹ்வே
அறிந்தவன் . மேலும் அந்த கருவியை இயக்கியும் விட்டான் அப்பொழுதும் ஜிப்ரஹீல் அலைஹி
வசல்லம்
நபி இப்ராஹிம் அலைஹி
வசல்லம் அவர்களிடம் நபியே கூறுங்கள் இப்பொழுது உதவி வேண்டுமா என்று அப்பொழுது ஹஸ்புனல்லாஹ்
அப்பொழுது மழைக்கான மலக்கு அவர்கள் ஜிப்ரஹீலிடம்
என்ன செய்யவேண்டும் மழையை பொழிய செய்யவேண்டுமா என்று அப்பொழுது ஹஸ்புனல்லாஹ் அப்பொழுது
அல்லாஹ் கட்டளையிட்டான் அந்த மழையின் மலக்கிடம்
அல்ல அந்த நெருப்பிர்கே கட்டளை இட்டான் நெருப்பே
நீ இப்ராஹிமுக்கு சலாமத் தரக்கூடிய குளிரை மாறிவிடு என்று . இதனை பற்றி இப்ன் அப்பாஸ்
ரலியல்லாஹுதால இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும்பொழுது கூறுகிறார்கள் அல்லாஹ் மட்டும்
சலாமத் என்ற வார்த்தை கூறாமல் பர்தன்(குளிர்ச்சி ) ஆகிவிடு என்று கூறியிருந்தால் அந்த
நெருப்பு கடுமையான குளுராக நபி இப்ராஹிம் அலைஹி
வசல்லம் அவர்களுக்கு சிரமம் தந்திருக்கும்
என்று விளக்கம் தருவதாக உலமாக்கள் கூறுகிறார்கள்
. இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் நெருப்பிற்குள் இருந்து சிரித்துகொண்டிந்ததை
கண்டு அம்மக்கள் அட்சர்யபட்டர்கள் அவருடைய தந்தை தன்னை அறியாமலேயே என் மகனே உன்னுடைய ரப்பு விசேசமான ரப்புதான் என்று கூருவிடுகிரார்கள்
அனால் அவர் இஸ்லாத்தை ஏற்க்கவில்லை அதனை கண்ட மக்கள் அனைவரும் இனி இவரை ஒன்றும் செய்ய
இயலாது என்று கூறிவிட்டு போய்விடுகிறார்கள்
ஆனால் நபி இப்ராஹிம்
அலைஹி வசல்லம் அவர்களோ அந்த நெருப்பில் இருந்து
இரங்கி நேராக அரசனின் கூடாரத்திற்கு சென்றுவிட்டார்கள் அங்கு சென்று நம்ரூதே நீ அல்லாஹ்
ஒருவனையே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுகொள்
என்று கூற அவன் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் உன் ரப்பு என்ன செய்கிறான் என்று கேட்டான் அதற்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம்
அவர்கள் எனது ரப்பு உயிரை கொடுக்கிறான் பிறகு
மரணத்தையும் கொடுக்கிறான் என்று கூறினார் அதற்கு அந்த மன்னன் என்ன உன்னுடைய ரப்பு உயிரையும்
மரத்தையும் கொடுக்கிரார்ணா நான் தான் உயிரையும் மரணத்தையும் கொடுக்கிறேன் என்று கூறினான்
அதற்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் எவ்வாறு என்று கேட்க அங்கு இருந்த ஒருகாவலாளியை அழைத்து அவனை கொன்றுவிட்டு பிறகு ஒரு மரண தண்டனை
கைதியை அழைத்து நீ சுதந்திரமாய் செல் என்று கூறினான் பார்த்தீர நான் உயிரையும் எடுத்தேன்
மற்றும் உயிரையும் கொடுத்தேன், நமது நபி இப்ராஹிம்
அலைஹி வசல்லம் அவர்கள் அப்படியா சரி எனது ரட்சகன் சூரியனை கிழக்கிலிருந்து உதயமாக்குகிறான்
நீ ரப்பாக இருந்தால் மேற்கிலிருந்து கொண்டு வா பார்போம் என்று கூறியவுடன் அம்மன்னன் திகைத்து விட்டான்.
பிறகு அந்த ஊரிலேயே
தங்கி இருந்தார்கள் பிறகு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது
அல்லா எவ்வாறு நம்மை உயிர்பிப்பன் என்று அல்லாஹுவிடமே கேட்டு விடலாம் என்று முடிவு
செய்து அல்லாஹுவிடம் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம்
அல்லாஹுவிடம் கேட்டார்கள் அல்லாஹ் நீ மனிதர்களை எவ்வாறு உயிர்பிப்பாய் என்பதை நீ எனக்கு
கான்பிபாயாக என்று கேட்டபொழுது அல்லாஹ் கேட்டான் ஏன் நபினே நீங்கள் நம்பவில்லையா என்று
கேட்டான் அதற்கு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஏன் இல்லை என் இதயம் அமைதிபெருவதர்க்காக
கேட்கிறேன் என்று கூறினார் , அதற்கு அல்லாஹ் நபியே
நீர் வேறு வேறு பறவைகளாக நான்கு பறவைகளை பிடித்து
அதனை வெட்டி பிறகு அதன் மாமிசத்தை கலந்து
மலைகளில் சிறுக சிறுக வைத்துவிடுங்கள் என்று கூறினான்
அவ்வாறே நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் செய்தார்கள் பிறகு அல்லா கூறினான் நபியே
இப்பொழுது அந்த பறவையின் பெயரை அலைபாயாக என்று
அவ்வாறே அழைக்க அந்த பறவையின் மாமிசங்கள் ஒன்றிணைந்து
பறவையாக உருமாறி நபியிடம் வந்ததாக அல்லா தனது திருமறையில் சாட்சி கூறுகிறான் .மேலும்
இதை நடத்திவிட்டு அல்லா கூறுகிறான் நபியே இதன் மூலம் நீர் அறிந்துகொல்வீராக அல்லாஹ் தீர்கமான அறிவுடையவன் அணைத்து பொருளிலும் ஆற்றல்
உடையவன் என்று ..
இவ்வாறு நபி இபுறாஹீம்
அலைஹி வசல்லம் அவர்களது தனிப்பட்ட வரலாறை நாம் பார்த்தோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த பத்திப்பில்
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களுடைய புதல்வர்கள் மேலும் அவர்களுடைய த்யாகங்கள்
போன்றவற்றை இன்ஷா அல்லா காண்போம் .. இவைகள் அனைத்தையும் மாற்று மத நண்பர்களும் படிக்க
வேண்டும் என்பதற்காக இதனை கதைவடிவில் அமைத்திருக்கிறேன்
இவைகளில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால்
அல்லாஹுவிர்க்காக என்னிடம் கேட்டு விடுங்கள் இதில் தவறை நீங்கள் கண்டால் அதனை தெரிவித்துவிடுங்கள் அல்லாஹ் ரஹ்மத்
செய்வானாக "எவர் ஒரு பாதையில் இல்மைத் தேடிப் புறப்படுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்.
மலக்குகள் இல்மைத்தேடக்கூடியவருக்காக அவரின் செயலால் சந்தோஷமடைந்து தங்கள் இறக்கைகளை
விரித்து வைக்கிறார்கள். " என்று நமது நாயகம் சள்ளலாஹு அலைஹி வசல்லம் கூறியதாக
அபுதர்தா ரலி யல்லாஹுஅன்ஹு அறிவித்ததாக ஹதீத் நூல்ஹளில் பதிவாகி உள்ளது .. நாம் இதனை
வெறும் கதையாக பாரமால் இது உண்மைதானா என்று அல்லாஹுவின் அருள்மறையில் தேட முற்படுவோம் அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவக்குவான்
இன்ஷா அல்லாஹ் .
இதில் எனக்கு அறியாத
பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால்
நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை
ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம் போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கு குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியா வில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே படித்து
உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில்
இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ் ரக்மதுசெய்வானாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
0 comments:
Post a Comment