Saturday, April 20, 2013

ஹல்ரத் நபி யாகூப் அலைஹி வசல்லம் வரலாறு



பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக .

நண்பர்களே இன்று இன்ஷா அல்லாஹ்   ஹல்ரத் நபி  யாகூப் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை காண்போம்
இவரை பற்றி அல்லாஹ்  அதிகமாக சிலாஹித்து  தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான் இவருடைய  வரலாறை  வரலாற்று  ஆசிரியர்கள்  மூலமே  பெற  முடிந்தது  இவரை பற்றி நான் குறிப்புகள் இன்ஜீலில்  நிறைய உள்ளதாக வரலாற்று ஆசியர்கள் குறிப்பிடுகிறார்கள் இவரின் பெயர் இன்ஜீளில் "jacab"  என்ற பெயர்மூலம் அழைக்கிறார்கள்.

மேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹி வசல்லம் அவரின்  பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இஸ்ராயில் என்ற பெயரும் உள்ளதாக அல்லாஹ்  திருமறையில் சாட்சி கூறுகிறான் .

நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களுக்கு  இரண்டு பிள்ளைகளை அல்லாஹ் அருளினான் அதில்  முத்தவர்  ஈசு இரண்டாவது பிள்ளை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் . மேலும் நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் தனது மூத்த மகன் ஈசுவின் மீது அதிக பிரியமாக இருந்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் மேலும் நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களின் மனைவி "ரிப்கா" . அந்த அம்மையார்  நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யாகூபே நீ தந்தையுடன் இணக்கமாக  இருந்துகொள் அவரின் துஆவை நாடு என்று அறிவுரை  கூறுகிறார்கள் இவ்வாறு இருக்க நாட்கள் ஆக ஆக நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களுக்கு பார்வை மங்கிவிடுகிறது   அப்பொழுது  நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்கள் தனது மூத்த மகனிடம் ஒரு உணவை கேட்டார்கள் அதனை  ஈசு அவர்கள் கொண்டுவருவதற்கு முன்  அவர்களின் தாயார் தனது இரண்டாவது மகன் யாகூபிடம் அந்த பொருளை கொடுத்து மேலும் தனது மூத்த மகனின் சட்டையை போட்டு அனுப்பினார்கள் மேலும் நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவரால் யார் என்று கணிக்க முடியாத நிலையில் அவர் நீ யார் என்று கேக்க நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் நான் உங்களது மகன் என்று பதில் கொடுக்க அந்த உணவை வாங்கி  உண்டுவிட்டு  அந்த மகனுக்காக உருக்கமாக  நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்கள்  துஆ செய்தார்கள் பிறகு மூத்த மகன் அந்த உணவை கொண்டு வந்து தந்தையிடம் கொடுக்க நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்கள் மகனே இப்பொழுதுதானே கொண்டுவந்தாய் நான் உண்டுவிட்டு துஆ செய்தேனே என்று பதிலுரைக்க அவர் விளங்கி கொண்டார் வந்தது தம்பி என்று அவ்வாறு இருக்க ஈசு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை வெறுக்க  தொடங்கினார்கள் எந்த அளவிற்கு என்றால் தனது தம்பியை கொன்றுவிடும் அளவிற்கு வெறுத்தார்கள் இவ்வாறு நாட்கள் கழிய கழிய தனது  தாய் தனது சகோதரன் லாபான் என்றவரிடம்   நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை அனுப்பி வைத்தார் போகும் வழியில் ஒரு இடத்தில் உறங்கும் வேளையில் அவர்  ஒரு கனவை காண்கிறார் அதில் மலக்குகள் வானத்தின்  பக்கம்  போவதையும் கீழே இறங்குவதையும்  காண்கிறார்கள் மேலும் அல்லாஹ்  அவருக்கு   சுபசெய்தியையும் அறிவிக்கிறான் அல்லாஹ்  உங்களுக்கு ஒரு பொக்கிசத்தை மிக விரைவில் அருளவிருக்கிறான் என்று இதனை கேட்டதும் நபி யாகூப் அலைஹி வசல்லம்  அவர்கள் திருப்தி கொண்டவராக இருக்கிறார்கள் கனவை பற்றி நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நபி மார்களின்  கனவும் ஒரு வகித்தான் என்று உலமாக்கள் கூற கேட்டிருக்கிறேன் . மேலும் நபி முகம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறுகிறார்கள் மக்கள் காணும் நல்ல கனவும் அல்ல்ஹுவின்  புறத்தில் இருந்து வரும் வகியின் 46 வகையில் அதுவும் ஒன்று என்றும் கூறியதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்  இன்று நமது கனவுகள் நல்லதாக அமைகிறதா என்ன இன்னும் சொல்ல போனால் அல்லாஹ்  பாதுகாப்பானாக எனது நண்பர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள் பேய் கனவுகள் வருவதாக எவ்வளவு அறியாமை அல்லாஹுவின் ரசூல்  அவர் கூறிய வழிமுறை படி இன்று யாரும் உறங்க போவதில்லை பிறகு சைத்தான் வராமல் மலக்குகளா வருவார்கள்   சிந்தியுங்கள் மக்களே நமக்கு இலகுவான வலிகள் பல அல்லாஹுவின் தூதர் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் உங்கள் களைப்பை போக்க சுபுஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ்  33 தடவை அல்லாஹு அக்பர் 33 தடவை பிறகு யார் இரவில் "ஆயத்துல் குர்சி" ஓதி வருவாரோ அவரின்  பக்கம்  சைத்தான் நெருங்கமாட்டான்  . மேலும் இரவில் உறங்க செல்லும் முன் சுன்னத் தொழுகை தொளுதிருக்கிரோமா அல்லாஹ்  பாதுகாப்பானாக மேலும் ரசூலுடைய சுன்னத்தில் ஒன்று உறங்க செல்லும் முன் "சுறா அல் பாத்திகா " "சூரா இக்லாஸ்" " சுறா அல் பலக் " மற்றும்  " சுறா அந்நாஸ் " என்ற சூராக்களை ஓதி தனது கையில் ஊதி தடைவிகொண்டதாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் இதில் ஏதாவது ஒன்றையாவது நாம் பின்பற்றுகிறோமா என்ன ... அல்லாஹ்  பாதுகாப்பானாக நம்மை சீர்படுத்த அல்லாஹுவே போதுமானவன் அவனிடமே நீங்கள் உங்களை சீர்படுத்த உதவியை கோருங்கள் இன்ஷா அல்லாஹ்  அல்லாஹ்  நம்மை பாதுகாப்பான் .

   பிறகு நிம்மதியாக தனது தாய் மாமன் வீட்டிற்கு சென்றார் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள்  அந்த லாபான் அவர்களுக்கு இரு மகள்கள் இருந்தார்கள் அவர்களில் மூத்தபெண் ரய்யா இரண்டாவது பெண்  ராஹீல் நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இரண்டாவது மகள் ராகில் பிடித்துபோக தனது தாய்மாமன் லாபானிடம் பெண் கேற்க அவர் தனது  ஆடுகளை ஏழு வருடங்கள் நீ மெய்து வந்தால் அதையே  நான் மகராக வைத்து கொண்டு உனக்கு திருமணம் செய்து தருகிறேன் என்று கூறினார் அவ்வாறே நமது தந்தை யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் ஏழு வருட காலம் ஆடுகளை மேய்த்துவிட்டு பிறகு வந்து  திருமணம் செய்ய நாடியபொழுது லாபான் தனது மூத்த மகள் ரய்யாவை திருமணம் செய்து தருவதாக கூறினார் அதற்கு நமது தந்தை நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உங்களிடம் இரண்டாவது மகளை திருமணம் செய்ய கோரினேன் நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்க்க லாபான் கூறினார்  மூத்த பெண் இருக்கும் பொழுது இரடவது பெண்ணுக்கு திருமணம் செய்ய இயலாது என்று நம் சமூகம் இப்பொழுது கூறுவதை போல் கூறினார் மேலும் ஏழு ஆண்டுகள் ஆடு மேய்தல் எனது இரண்டாவது மகளையும் திருமணம் செய்து தருகிறேன் என்று கூற அவ்வாறே அவரும் மெய்த்து ராகில் என்ற அம்மையாரையும் திருமணம் செய்து கொண்டார் .
இப்பொழுது நமக்கு சந்தேகம் வரலாம் நாம் இரு சகோதரிகளை திருமணம் செய்யலாமா என்று ? அது அவர்களுடைய மார்க்கத்தில் அனுமதி உண்டு நம்முடைய மார்கத்தில் அனுமதி இல்லை மீண்டும் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும்பலாம் என்ன பாய் அணைத்து நபி மார்களும் ஒரே தீனைதானே எத்திவைதார்கள் அல்லாஹ்  கூட யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை யூதர் என்றோ அல்ல கிறிஸ்துவர் என்றோ அழைக்காதீர்கள் மாறாக முஸ்லீம் என்று கூறி இருக்கிறானே ஆம் தோழரே அவ்வாறுதான் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லாஹ்  நபி மார்களை இறக்கி அவர்களுக்கு வஹியை அறிவித்து அவர்களது வாழ்கை நெறிகளை கற்று கொடுத்தான் ஆனால் எந்த நபியை இறுதியாக அனுப்பினானோ அந்த கண்மணி நாயகத்திற்கு அருளிய வேதமான குரானில் நபியே நிச்சயமாக அல்லாஹுவிடம் அங்கீகரிக்க  பட்ட மார்க்கம் இஸ்லாம் மேலும் உம்முடய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் என்று எந்த நபியுடைய சமூகத்திற்கும் கூறியது கிடையாது. ஆதலால்தான் அல்லாஹ்  நம்மை கண்ணிய படுத்தி இருக்கிறான் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள் என்னுடைய சமுதாயம்தான் இந்த உலகிற்கு இறுதியாக  வந்தார்கள் ஆனால் அந்த மறுமை நாளில்  சொர்கத்திர்க்குள் என்னுடைய சமூதாயம் செல்லாமல்  வேறு எந்த நபியுடைய சமுதாயமும் செல்ல இயலாது மாஷா அல்லாஹ்  அல்லாஹ்  நம்மீது உள்ள அன்பை நாம் புரியாத மடையர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் அல்லாஹ்  பாதுகாப்பானாக 
நாம் தலைப்பிற்கு செல்வோம் இவ்வாறு இருமனைவி  மற்றும் தனது தாய்மாமன் மேலும் இரு அடிமை பெண்களையும் குறிப்பிட்ட ஆடுகளையும்  அவர்களுக்கு  கொடுக்கிறார்
நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது குடும்பம் நினைவுக்கு வந்தவுடன் தனது அண்ணன்  தான் மீது கோவத்துடன் இருப்பதால்
மேலும் நபி யாகுப் அலைஹி வசல்லம் அதில் ஒரு அடிமையையும் தனது ஆடுகளில் சிலவற்றையும் தனது அண்ணன்  ஈசுவிடம் கொண்டு செல்லுமாறு கூறினார் மேலும் அவர் உன்னை யார் என்று கேட்டால் நான் உங்களது அடிமை என்று கூறு மேலும் உன்னை யார் அனுப்பியது என்று கேட்டால் உங்களுடைய அடிமை யாகூப் அனுப்பி வைத்தார்கள் என்று கூறு என்று அந்த அடிமையை அனுப்பினார்கள் இவ்வாறு ஈசு கேட்க்க தனது தம்பி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களின் மேல் உள்ள கோவம் தனிய யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது அண்ணனை காண வந்து அவரை கட்டியணைத்து ஏழு முறை காலில் விளுந்த்ததாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்  அனைத்தையும்  அல்லாஹுவே அறிந்தவன்  மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு  மற்ற மனைவி மார்களின் மூலம் 10 குழந்தைகள் பிறந்தார்கள் ராகில் என்ற அம்மையாரின் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள் அதில் மூத்தவர்   நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டாவதாக புன்யாமின் என்பவர் இந்த புன்யாமின் பிறக்கும்    தருவாயில்   ராஹீல் அம்மையார் பிரசவத்தில் இறந்துவிடுகிறார்   இவ்வாறு இருக்க  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் புன்யாமீன் மீதும் மிகவும் பாசமாக இருந்தார் இதன் பிறகு அந்த பத்து சகோதரர்கள் திட்டம் செய்து நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை வைத்து சூழ்ச்சி செய்ததை இன்ஷா அல்லா நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறு  பதிவில்  காண்போம் இன்ஷா அல்லாஹ்  மேலும்
இவ்வாறு மக்கள் தன் பிறகு தவறான பாதையில் செல்ல கூடாது என்பதற்காக தனது மரண தருவாயில் தனது   மகன்களிடம் என் மக்களே எனக்கு பின்னர் நீங்கள் எதனை வணங்குவீர்கள் என்று வினவ அவரது பிள்ளைகள் தந்தையே உங்களுடைய வணக்கத்துக்கு உரியவனும் நம்முடைய மூதாதையர் இப்ராஹீம் இஸ்மாயில் இஸ்ஹாக் அவர்களுடைய வணக்கத்துக்கு உரியவனுமான ஒரே வல்ல நாயகன் அல்லாஹ்  ஒருவனையே வணங்குவோம் என்று கூறினார்கள் மேலும் இவர்களை போல அந்த வல்ல நாயனுக்கு கட்டுப்பட்டு முஸ்லீமாக வாழ்வோம் என்று உறுதி அளித்தார்கள் . இன்று நமது நிலையை சற்று சிந்தித்து பார்த்துகொள்ளுங்கள்  ஆம் ஒரே நாயனைதான் வணங்குகிறோம் ஆனால் அவனின் கட்டுபாடுகளை மட்டும் தகர்த்து எரிந்து விடுகிறோம்

அல்லாஹ்  பாதுகாப்பானாக அவன்  கட்டுபாட்டை  பேணி நடக்கும் நன்மைக்களுடன்  நம்மை இணைத்து வைப்பானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் ..
மேலும் அல்லாஹ்  இப்ராஹீம் நபிக்கு சுபசெய்தி  சொல்லும்பொழுது  அதிகமான இடத்தில்  இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை பற்றி எப்பொழுதெல்லாம் சொல்கிறோனோ அப்பொழுதெல்லாம்  நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை பற்றியும் அல்லாஹ்  சிலாஹித்து கூறுகிறான் மேலும் அல்லாஹ்  கூறுகிறான் இஸ்ஹாக்கையும் யாகூபையும் அவருக்கு அன்பளிப்பாக  வழங்கினோம் என்று குறிப்பிடுகிறான் .
மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் தான் மஸ்ஜிதுல் அல் அக்ஸா (ஜெருசுலம் ) என்ற புனித மிகு பள்ளியை கட்டியுள்ளார் இன்று இஸ்ரேலர்கள் கையில் உள்ள அந்த புனித பள்ளிவாசல் . மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுடைய அடக்கஸ்தலம் பலஸ்தீனத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் . அல்ஹம்துலில்லாஹ்  அல்லாஹுவின் அருளால் இத்துடன் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்கை வரலாறுகளை கண்டோம் மேலும் நபி  யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறுடன் இணைந்து நபி யாகூப் அலைஹி வசல்லமின் சிறு சிறு வரலாறு இணைந்து இருக்கிறது அதனை இன்ஷா அல்லா நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறின் பொது காண்போம் ,,

இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்



வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 





0 comments:

Post a Comment