அல்லாஹ்வின்
அருளினால் நாம் இப்பணியை தொடங்குகின்றோம் இன்ஷா அல்லாஹ் இப்பணியை மெம்மேலும்
அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்...
நாம்
படைத்ததின் நோக்கம் :
உலகம்
படைத்ததின் நோக்கம் :
அல்லாஹுவின் மிக பெரும்
அருள் அவனின் கருணை என்பது நாம் அனைவரும் அறிந்ததே . அவனின் 99 பெயர்களில் ஒன்று அல் ஹக்கீம் .
நம்முடைய
நிலைப்பாடு இக்கேள்வியில் என்ன இருக்கிறது என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டு
கொள்ளுங்கள் . பொதுவாக நமது எண்ணம் நாம் சந்தோசமாக இருக்கவே இவ்வுலகில் படைக்க
பட்டோம் என்றுதான் ஆனால் அல்லாஹ் என்ன வினதொடுக்கிறான் என்றால் ..
உங்களை
நாம் படைத்ததெல்லாம் வீனுகாகத்தான் என்றும் நிச்சயமாக நம்மிடம் மீட்க பட
மாட்டீர்கள் என்றும் எண்ணி
கொண்டிருந்தீர்களா?
உண்மையான அரசனாகிய அல்லாஹுவே மிக்க உயர்ந்தவன் அவனை தவிர
வணகுதுக்கு உரிய நாயன் வேறு இல்லை அவனே கண்ணியத்திருக்குரிய அருசின் ரட்சகன் .
அல்
முமீன் 23-115,116
வானத்தையும்
பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக (வீண் விளையாட்டிற்காக ) நாம்
படைக்க வில்லை
அல்
அன்பியா 21-16
வானத்தையும்
பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக நாம் படைக்க வில்லை
நிச்சயமாக அவ்விரண்டையும் உண்மையை கொண்டே தவிர அதை படைக்கவில்லை எனினும்
பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள்
அல் துகான் 44-38,39
ஹாமீம்
யாவரையும்
மிகைத்தோன் தீர்க்கமான அறிவுடையவன் அல்லாஹுவிடமிருந்தே இவ்வேதம் இறக்கப்பட்டது
வானங்களையும்
பூமியையும் இவ்விரண்டின் மத்தியிள் உள்ளவையும் உண்மையைகொண்டு குறுப்பிட்ட தவணையை
கொண்டே தவிர இதனை நாம் படைக்க வில்லை மேலும் (அல்லாஹுவை ) நிராகரிகின்றார்களே
அத்தகையோர் அவர்கள் தங்களுக்கு எச்சரிக்கை செய்ய பட்டதை விட்டும் புறக்கநிக்கின்றவர்கலாகவே இருகின்றார்கள் .
அல் அஹ்காஃப் 46-1,2,3
அல்லாஹுவின்
படைப்பில் அளவுகோலை ஒருவராலும் கணிக்க இயலாத ஒன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய
பலர் முற்பட்டு
அதை
கண்டறிந்து இஸ்லாத்தை தழுவும் கட்சிகள் நாம் பல காண்கிறோம் அல்லாஹ் தன
அத்தாட்சிகளை அறிவுடையோருக்கு விளக்குகிறான்
நிச்சயமாக
வானங்கள் மற்றும் பூமியில் படைத்திருப்பதிலும் , இரவும் பகலும் மாறி மாறி
வருவதிலும் அறிவுடையோர் பலருக்கு இதில் அத்தாட்சி இருகின்றது
(அறிவுடைய ) அத்தகையோர் நின்ற
நிலையிலும் இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களின் மீது சாய்ந்தும் அல்லாஹுவையே
நினைத்து வானங்களையும் மற்றும் பூமியின் படைப்பை பற்றியும்
சிந்தித்து எங்கள் ரட்சகனே இவற்றை நீ வீணாக படைக்க வில்லை நீ மிக தூய்மையானவன் நரக
நெருப்பில் இருந்து எங்களை காத்தருள்வாயாக
ஆல இம்ரான் 3-190,191
அல்லாஹ்
தான் படைப்புகளை நம்ப மறுக்கும் மனிதர்களுக்கு நரக நெருப்பு உள்ளது என்பதை வாக்களிக்கிறான்.
வானத்தையும்
பூமியும் இவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவவற்றையும் வீணாக நாம் படைக்க வில்லை இதை நிராகரிதார்களே அத்தகையோர்
எண்ணமாகும் ஆகவே நிராகரித்துவிட்டார்களே அத்தகையோர்க்கு (நரக) நெருப்பின் கேடுதான் .
சாத் 38-27
நிச்சயமாக
விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்தார்களோ அத்தகையோர் சுவனபகுதிகளில்
புகுத்துகின்றான் அவற்றின் கீழ் நீர் அருவிகள் ஓடிகொண்டிருக்கும் இன்னும்
நிராகரிபார்களே அத்தகையோர்க்கு (உலக ) சுகத்தை அனுபவித்துகொண்டும் கால்நடைகள்
தின்பதைபோல் திண்டுகொண்டிருகிரார்கள் . நரக நெருபே அவர்களுக்கு ஒதுங்குமிடமாகும்
...
முஹம்மது 47-12
நபியே
நீ அவர்களை விட்டுவிடுவீராக ! அவர்கள் உண்ணட்டும் சுகமனுபவிக்கட்டும் (அவர்களுடைய
வீண் ) ஆசை (மறுமையை ) அவர்களுக்கு மறக்கடித்துவிட்டது .(இதன் முடிவை) அவர்கள்
நன்கறிந்து கொள்வார்கள்
அல் ஹிஜ்ர் 15-3
திட்டமாக
ஜின்களையும் மனிதர்களையும் அநேகர்களை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம்
(அவர்கள் எத்தகயவர்கள் என்றால்) அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன
அவற்றை கொண்டு நல்லவற்றை அவர்கள் விளங்கி கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு கண்களும்
உண்டு அவற்றைக்கொண்டு அவர்கள் (இவ்வுலகின் அல்லாஹுவின் அத்தாச்சிகளை )பார்க்க
மாட்டார்கள் அவர்களுக்கு காதுகளும் உண்டு அவற்றை வைத்து (நல்லவற்றை )
கேட்கமாட்டார்கள் அவர்கள் கால்நடைகளை போன்றவர்கள் அவற்றை விட அவர்கள் மிக அதிகமாக
வழிகெட்டவர்கள் அவர்களேதாம்( நம் வசனங்களை புறக்கணித்து ) பராமுகமானவர்கள் ..
அல் ஆ'ராப்ஹ் 7-179
யா
ரப்பே இத்தகைய குட்டத்தில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக .... உன் கண்ணியத்தை உன்
கருணையை கொண்டு எங்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல்
ஆலமீன் ,
இவுலகை
அல்லாஹ் எவ்வாறு படைத்தான் என்பதை அல்லாஹ் தனது திருமறை திருகுரானில் எவ்வாறு
குறிப்பிடுகிறான் என்பதை அறிவோம் .
அவன்
(அல்லாஹ்) எத்தகையவன் என்றால் வானங்களை மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்
அவனின் அரிசின் தண்ணீர் மீதிருந்தது உங்களின் செயல்களால் அழகானவர் யார் என்பதை
சொதிபதர்காக மேலும் இறந்த பின்னர் நீங்கள் நிச்சயமாக (உயிர் கொடுத்து )
எழுப்ப படுபவர்கள் என்று அவர்களிடம் நீர் கூறினால் அதற்கு இது
நிச்சயமாக சூனியமே தவிர வேறு இல்லை என்று நிச்சயமாக நிராகரித்து கொண்டிருபவர்கள்
கூறுவார்கள்
ஹூது 11-7
அவன்(அல்லாஹ்) எத்தகையவனென்றால் உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்பதை அவன் (அல்லாஹ்) சோதிப்பதற்காக மரணத்தையும் ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கிறான் அவனே (யாவற்றையும்) மிகைத்தவன் மிக்க மன்னிப்பவன்
அவன்
(அல்லாஹ்)எத்தகையவன் என்றால் ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்தான் (மனிதனே )
அர்ரஹுமானின் படைப்பில் நீ யாதொரு முரண்பாட்டையும் காண மாட்டாய் ஆகவே பார்வையை
மீட்டிப்பார் நீ பிளவுகளை காண்கிறாயா
பின்னும்
இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார் (எக்குறையும் இன்றி )
அப்பார்வை
இழிவடைந்ததாக களைப்புற்று உன்னிடம் திரும்பிவரும்
மேலும்
நாம் பூமிக்கு சமீபமாக வானத்தை (நட்சத்திரங்களை ஆன ) விளக்குகளை கொண்டு
அலங்கரித்திருக்கின்றோம் இன்னும் அவைகளை சைத்தான்களுக்கு ஏறியப்படுபவைகளாகவும் நாம்
அமைத்தோம் அவர்களுக்கு நரக நெருப்பின் வேதனையையும் நாம் தயார் செய்து
வைத்திருக்கிறோம் .
அல் முல்க் 67-2,3,4,5
அல்லாஹ்
மனிதர்களை எதற்காக படைத்தான் என்பதை பற்றி எப்பொழுது பல தர்க்கங்கள்
ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே ... அல்லாஹ் அனைவரையும் எதற்காக
படைத்தான் என்பதை அவன் வார்த்தையாக திரு மறையில் என்ன கூறுகிறான்
மேலும்
ஜின்களையும் மனிதர்களையும் என்னை (அல்லாஹ்வை ) வணங்குவதற்கே அன்றி வேர் இல்லை ..
அவர்களிடத்தில்
(என் படைபுகளுக்காக) யாதொரு உணவையும் நாட வில்லை அன்றியும் எனக்கு அவர்கள்
உணவளிபதையும் நான் நாட வில்லை .
(நபியே நீர் கூறுவீராக ) அல்லாஹ் அவன்தான் யாவருக்கு
மிக்க உணவளிப்பவன் பலமுடயவன் உறுதியானவன்
அல் தாரியாத் 51-56,57,58
மாஷா அல்லாஹ் மேலும் மேலும் அல்லாஹுவின் அருளை நாட அவனின் புறத்தில் இருந்து கல்வியை நாடுவோம் இன்ஷா அல்லாஹ்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
இவை
அனைத்தும் அல்லாஹ் வின் வேதத்தில் இருந்து
எடுக்கப்பட்டது இதில் எதேனும் தவறை நீங்கள் அறிந்தால் உடனே அல்லாஹ்விற்காக எனக்கு
தெரிய படுத்துங்கள் e.mail :
thanishbatcha51@gmail.com இன்ஷா அல்லாஹ் இப்பணி தொடர உங்களது ஆதரவை
தாருங்கள் இப்பதிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் அல்லாஹ்விற்காக இதனை உங்கள்
நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் இந்த பனி தொடர துஆ செய்யுங்கள் ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன் ......
0 comments:
Post a Comment