தமிழக சகோதரர்களுக்கான பதிவு :
சகோதரர்களே அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மீது உண்டாகட்டும் இன்றையதினம் இந்திய முஸ்லீம்களை நேசிக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள் வெறுக்கும் மக்களும் இருக்கிறார்கள் ஏன் ஏன்பது அனைவரும் அறிந்ததே இன்று சில சமூக விரோதிகள் சில குரானுடைய வசனங்களை மக்களிடையே தவறான கண்ணோட்டத்தோடு பரப்பிவருகிறார்கள் அவை ஏன் ஏன்பதும் நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் கூறும் சில கருத்துக்களை நம் மக்கள் அறியாமல் இவை உண்மையாக இருக்குமோ என்று குழம்புகிறார்கள் மேலும் கூத்தாடிகளும் தங்களது வியாபார யுத்தியாக இஸ்லாமியர்களை குறைகூறினால் அனைவரும் விரும்புவார்கள் என்று தங்களது கதைகலத்தில் முதன்மையாக எங்களுடைய செயல்பாடுகளை தவறுதலாக சித்தரிக்கிறார்கள் இவை அனைத்தும் இன்று ஏகபோக வரவேர்புகளோடு அரங்கேறுகிறது இதற்கு காரணம் நம்முடைய அறியாமை ஆம் நாம் ஒரு பொருளை ஆராயாமல் வியாபாரியின் வார்த்தை ஜாலத்தால் மயங்கி அந்த பொருளை வாங்கினால் நஷ்டம் அடைவது யார் நாம்தானே இன்று அதனை அறியாத மக்கள் சில கயவர்களின் பொய்யான கருத்துக்களை உண்மை என்று நம்பி தங்களையே கேவலப்படுத்திக்கொல்கிரார்க ள் நண்பர்களே நம்முடைய பிரிவினைகளுக்கு என்ன காரணம் நம்முடைய அறியாமை எங்களுடைய சில தோற்றங்களின் வேறுபாடுகள் மற்றும் செயல்களின் வேறுபாடுகள் இவைதான் இவைகளை பற்றி அறிந்தால் நீங்களும் இதைதான் விரும்புவீர்கள்இப்பொழுது கயவர்கள் குரானின் வசனங்களை அதிகமாக தவறாக மக்களில் பரப்பி வருகிறார்கள் ஆதலால் நாம் முதலில் நம்முடைய அறியாமையை நம்மிடம் இருந்து நீக்க வேண்டும் அதற்கு நாங்கள் யார் என்பதை நீங்கள் அறியவேண்டும் நாம் தினம் தினம் பல கட்டுரைகள் கவிதைகள் கதைகள் என்று பல புத்தகங்களை படித்திருக்கிறோம் அதே போல் எங்களை நீங்கள் அறியவேண்டும் என்றால் எங்களுடைய வேதத்தை குரானை நீங்கள் வேதம் என்று நினைத்து படிக்கவேண்டாம் சாதாரண புத்தகம் என்றே படியுங்கள் அதற்கான வாய்ப்பையும் நாங்களே கொடுக்கிறோம் இந்த பதிவின் கீழ் ஒரு தமிழில் மொழிபெயர்த்த குரான் பிரதி லிங்க் உள்ளதுஅதனை நீங்கள் டவுன்லோட் செய்து அதனை ஒரு கதை புத்தகம் போல் படித்தால் கூட போதும் நீங்க எங்களுடைய உண்மையான முகத்தை அறியலாம் இன்ஷா அல்லா நம்முடைய சகோதரத்துவமும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நம்முடைய எண்ணங்களை பகிரலாம் அதற்கு நீங்கள் எங்களை அறியவேண்டும் பிறகுதான் உங்களால் எங்களுடைய வலிகளை உணர முடியும் .இவை உங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பாலமாக நான் கருதுகிறேன் நான் உங்களை பற்றி அறியாமல் நீங்கள் என்னை பற்றி அறியாமல் ஒரு கானல் நீர்போல் உள்ள நம் சகோதரத்தை நிஜத்திலே கொண்டுவரவே இந்த முயற்சி இதனை நீங்கள் எங்களது அன்பளிப்பாக ஏற்றுகொள்ளுங்கள் எங்களை பற்றி அறிய ஊடகத்தில் தேடவேண்டாம் அவை மாயை நாங்கள் உங்கள் முன்னாள் வாழ்கிறோம் எங்களிடம் கேளுங்கள் உண்மையை நாங்கள் கற்றுதருக்றோம் இன்ஷா அல்லா அல்லாஹ்வே எங்களையும் உங்களையும் நேர்வளிபடுத்த போதுமானவன்இஸ்லாமிய நண்பர்களே உங்களுடைய நண்பர்களுக்கு இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிருங்கள் அவர்கள் நம்மை பற்றி அறிய வாய்ப்பு கொடுங்கள்
0 comments:
Post a Comment