This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, June 25, 2013

நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இறுதி பேருரை!!!!!!





அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமின்களே இன்றைய தினம் அல்லாஹுவின் தூதரின் இறுதி உரையை அறிவோம் அதன் மூலம் பல படிப்பினைகளை பெறுவோம் இன்ஷா அல்லா 

நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இறுதி பேருரை!!!!!!

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்) -

சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :







சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ
தோழனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினே

இன்று நாம் மறந்த ஒரு உன்னத மான செயல் தர்மம் அல்லாஹுவின் அருளுக்கு உகந்த செயல் தர்மம் அதனை பற்றி பாப்போம்


ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மறுமை நாளில்) அல்லாஹ், ''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், ''என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5021)





உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி





நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்




தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி



ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி


ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

“உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்.” (திர்மிதீ)



அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.

அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.()2:261)

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது, 1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.
2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.


மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.



நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.

சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள்.1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.




அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,

கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,

நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.



அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம், எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

எங்களது பாவங்களை எங்களது பெற்றோட்களின் பாவங்களை உலக முஸ்லீம்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்



தோழர்களே இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள் இந்த பக்கத்தில் இணையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு விடுங்கள் எங்களது பணி தொடர துஆ செய்யுங்கள் 

ஹஸ்புனல்லாஹ் நிமல் வக்கீல் 

தவக்கல்து ஆலல்லாஹ் 

லா ஹவ்ல  வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்

அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள் தோழர்களே
 

தமிழக சகோதரர்களுக்கான பதிவு :






தமிழக சகோதரர்களுக்கான பதிவு :

சகோதரர்களே அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மீது உண்டாகட்டும் இன்றையதினம் இந்திய முஸ்லீம்களை நேசிக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள் வெறுக்கும் மக்களும் இருக்கிறார்கள் ஏன் ஏன்பது அனைவரும் அறிந்ததே இன்று சில சமூக விரோதிகள் சில குரானுடைய வசனங்களை மக்களிடையே தவறான கண்ணோட்டத்தோடு பரப்பிவருகிறார்கள் அவை ஏன் ஏன்பதும் நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் கூறும் சில கருத்துக்களை நம் மக்கள் அறியாமல் இவை உண்மையாக இருக்குமோ என்று குழம்புகிறார்கள் மேலும் கூத்தாடிகளும் தங்களது வியாபார யுத்தியாக இஸ்லாமியர்களை குறைகூறினால் அனைவரும் விரும்புவார்கள் என்று தங்களது கதைகலத்தில் முதன்மையாக எங்களுடைய செயல்பாடுகளை தவறுதலாக சித்தரிக்கிறார்கள் இவை அனைத்தும் இன்று ஏகபோக வரவேர்புகளோடு அரங்கேறுகிறது இதற்கு காரணம் நம்முடைய அறியாமை ஆம் நாம் ஒரு பொருளை ஆராயாமல் வியாபாரியின் வார்த்தை ஜாலத்தால் மயங்கி அந்த பொருளை வாங்கினால் நஷ்டம் அடைவது யார் நாம்தானே இன்று அதனை அறியாத மக்கள் சில கயவர்களின் பொய்யான கருத்துக்களை உண்மை என்று நம்பி தங்களையே கேவலப்படுத்திக்கொல்கிரார்கள் நண்பர்களே நம்முடைய பிரிவினைகளுக்கு என்ன காரணம் நம்முடைய அறியாமை எங்களுடைய சில தோற்றங்களின் வேறுபாடுகள் மற்றும் செயல்களின் வேறுபாடுகள் இவைதான் இவைகளை பற்றி அறிந்தால் நீங்களும் இதைதான் விரும்புவீர்கள்இப்பொழுது கயவர்கள் குரானின் வசனங்களை அதிகமாக தவறாக மக்களில் பரப்பி வருகிறார்கள் ஆதலால் நாம் முதலில் நம்முடைய அறியாமையை நம்மிடம் இருந்து நீக்க வேண்டும் அதற்கு நாங்கள் யார் என்பதை நீங்கள் அறியவேண்டும் நாம் தினம் தினம் பல கட்டுரைகள் கவிதைகள் கதைகள் என்று பல புத்தகங்களை படித்திருக்கிறோம் அதே போல் எங்களை நீங்கள் அறியவேண்டும் என்றால் எங்களுடைய வேதத்தை குரானை நீங்கள் வேதம் என்று நினைத்து படிக்கவேண்டாம் சாதாரண புத்தகம் என்றே படியுங்கள் அதற்கான வாய்ப்பையும் நாங்களே கொடுக்கிறோம் இந்த பதிவின் கீழ் ஒரு தமிழில் மொழிபெயர்த்த குரான் பிரதி லிங்க் உள்ளதுஅதனை நீங்கள் டவுன்லோட் செய்து அதனை ஒரு கதை புத்தகம் போல் படித்தால் கூட போதும் நீங்க எங்களுடைய உண்மையான முகத்தை அறியலாம் இன்ஷா அல்லா நம்முடைய சகோதரத்துவமும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நம்முடைய எண்ணங்களை பகிரலாம் அதற்கு நீங்கள் எங்களை அறியவேண்டும் பிறகுதான் உங்களால் எங்களுடைய வலிகளை உணர முடியும் .இவை உங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பாலமாக நான் கருதுகிறேன் நான் உங்களை பற்றி அறியாமல் நீங்கள் என்னை பற்றி அறியாமல் ஒரு கானல் நீர்போல் உள்ள நம் சகோதரத்தை நிஜத்திலே கொண்டுவரவே இந்த முயற்சி இதனை நீங்கள் எங்களது அன்பளிப்பாக ஏற்றுகொள்ளுங்கள் எங்களை பற்றி அறிய ஊடகத்தில் தேடவேண்டாம் அவை மாயை நாங்கள் உங்கள் முன்னாள் வாழ்கிறோம் எங்களிடம் கேளுங்கள் உண்மையை நாங்கள் கற்றுதருக்றோம் இன்ஷா அல்லா அல்லாஹ்வே எங்களையும் உங்களையும் நேர்வளிபடுத்த போதுமானவன்இஸ்லாமிய நண்பர்களே உங்களுடைய நண்பர்களுக்கு இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிருங்கள் அவர்கள் நம்மை பற்றி அறிய வாய்ப்பு கொடுங்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள்:












கியாமத் நாளின் அடையாளங்கள்:

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினே
இன்று மறுமை நாளின் அடையாளங்களை அறிவோம்
மகளின் தயவில் தாய்-
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்
.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
நூல் : புகாரி 7121

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496

பாலைவனம் சோலைவனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்.
நூல்: புகாரி 1036, 7121

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம்
நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம்
நூல்: ஹாகிம் 4/493

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: புகாரி 7115, 7121

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
நூல் : முஸ்லிம் 2451

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 5162.

புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது
நூல்: முஸ்லிம்

அல்ஹம்துலில்லாஹ்
யா அல்லா எங்களது பாவங்களையும் மன்னிப்பாயாக எங்களது பெற்றோர்களின் பாவங்களை மன்னிப்பாயாக எங்களது மார்க்க சகோதரர்களான உலகம் முஸ்லீம்கள் அனைவரையும் மன்னித்து நேர்வழியில் நடத்துவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்



தோழர்களே இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள் இந்த பக்கத்தில் இணையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு விடுங்கள் எங்களது பணி தொடர துஆ செய்யுங்கள்

இந்த லிங்கில் எங்களது facebook முகவரி உள்ளது அதனுள் சென்று சில பதிவுகளை படியுங்கள் இன்ஷா அல்லாஹ் நஅம்மை நேர்வழி படுத்த நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனே போதுமானவன் 

http://www.facebook.com/pages/LEARN-ISLAM/416773231744140

லா இலாகா இல்லலாஹ்

ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா
அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள் தோழர்களே

Saturday, April 20, 2013

நபி யூசுப் அலைஹி வசல்லம் வரலாறு





பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக .

நண்பர்களே இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ்  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ் 

அல்லாஹ்  கூறுகிறான் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறை தொடங்கும் முன் நபியே நாம் உனக்கு இந்த குராரனை அறிவித்ததின் மூலமாக மிக்க அழகான வரலாற்றை உமக்கு கூறுகிறோம் நித்ச்சயம் நீர் இதனை   பற்றி அறியாதவராய் இருந்தீர்

இவ்வாறு அல்லாஹ்  தனது வார்த்தையிலேயே அழகாண வரலாறு என்று கூறுகிறான் அப்படி என்ன அழகாண வரலாறு இன்ஷா அல்லா காண்போம் ,,

நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்தமனைவி "ரய்யா"வின் குழந்தைகள் 10 பேர் இரண்டாவது மனைவி "ராஹில்"லின் வாயிலாக பிறந்த குழந்தைகள் இரண்டு  அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராஹில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள் இவர்களது வரலாறு முந்தய நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறில்  நீங்கள் காணலாம்.

இவ்வாறு தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள் மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மிக அழகானவர்களாக இருந்ததும் காரணாமாக உலமாக்கள் கூறுகிறார்கள்.

நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக உலமாக்களின் வாயிலாக கேட்டிருக்கிறேன் அல்லாஹ்  அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ்  இரு பாதியாக  பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கும்  மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லாஹ் பங்கிட்டு  வழங்கியதாக சுபுஹானல்லாஹ்  இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது தந்தை அவர்கள் மீதும்  அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் அதனை கண்ட யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க  தொடங்கிவிட்டார்கள் ஏன்  என்றால் நாமும் இவரை பராமரிக்காவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆட்பட்டுவிடுவார்கள்  என்று அஞ்சினார்கள் 

இந்த சம்பவத்தில் நமக்கு ஒரு சிறு படிப்பினைக்காக நான் ஒரு தகவலை தருகிறேன் இவ்வாறு பல  பிள்ளைகள் இருக்க ஒரு பிள்ளைகள் மீது நாம் பாசம் காட்டுவது இப்பொழுது நாகரிகமாக மாறிவருகிறது இவ்வாறு செய்யலாமா இவ்வாறு செய்வதாக இருந்தால் எப்பொழுது செய்ய வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழும்பலாம் இந்த சம்பவங்களை பற்றி நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் ஏதேனும் கூறி இருக்கிறார்களா ஆம் கூறி இருக்கிறார்கள்

நபி சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் கலந்துரையாடி கொண்டிருக்கும் வேளையில்  ஒரு சகாபியின் பிள்ளை வந்ததும் அந்த சகாபி அந்த பிள்ளையை மடியில் அமர்த்தி அவனுக்கு முத்தம் கொடுத்தார் இதனை கண்ட நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அந்த சஹாபியிடம் நீங்கள் இந்த குழந்தையுடன் நடப்பதுபோல்தான் உங்கள் மற்ற குழந்தைகளுடன் நடப்பீர்களா இவ்வாறுதான் அவர்களையும் கொஞ்சுவீர்களா என்று கேட்டார்கள் அதற்கு அந்த சகாபி இல்லை அல்லாஹுவின் தூதரே இந்த பிள்ளை மீதுதான் எனக்கு பாசம் அதிகம் என்று பதில் கூறினார் அப்பொழுது அல்லாஹுவின் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்  மறுமை நாளில் மற்றபிள்ளைகள் உங்கள்மீது வழக்கு தொடுப்பார்கள் என்று கூறினார்கள் 
ஆனால் ஒரு சில காரணங்களால் சில பிள்ளைகள் மேல் கவனம் கொள்ள அனுமதி உள்ளதாக உலமாக்கள் கூறுகிறார்கள் சில பிள்ளைகள் மாற்று திறனாளிகளாக  அல்ல மூளை வளர்ச்சி குன்றியவராக அல்ல அதிகமாக நோய்வாய் படும் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையிடம் சற்று கூடுதலாக அக்கறை எடுப்பதில் குற்றம் இல்லை . இப்பொழுது நம்மை பற்றி யோசிப்போம்  அவ்வாறுதான்  நாம் வாழ்கிறோமா  நான் கண்ட சில பேர்  கூறுவார்கள் மூத்த பிள்ளை மீது அதிக பாசம் இருப்பதாக சிலபேர் கடைக்குட்டி என்று கூறி அந்த பிள்ளையிடம் அதிக பாசம் காட்டுவது சில பேர் படிக்கும் பிள்ளையிடம் அதிகமாக பாசம் காட்டுவது படிக்காத பிள்ளை என்றால் ஏலமாக பேசுவது மேலும் சில பிள்ளைகளை எடுத்துக்கொண்டு இந்த பிள்ளைதான் எனக்கு ராசியான குழந்தை இவர் பிறந்த பிறகுதான் எனக்கு பரக்கத் வந்தது என்று கூறுகிறார்கள் இத்தகைய செயல்கள் அணைத்து சைத்தானின்  செயல்கள் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை ஆகையால் தங்கள் பிள்ளைகளை சமாமாக பாவித்து வளர்க்கவே அல்லாஹுவும் அல்லாஹுவின் தூதரும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் ஆதலால் நண்பர்களே அல்லாஹுவிர்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்  உங்களது பிள்ளைகள் மறுமையில் அல்லாவிடம் வழக்கு தொடுத்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து செயல் படுங்கள் .

 நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் நேசிக்க காரணம் அந்த குழந்தைகள் தனது தாயில்லாமல்  கஷ்டபடுவதால் அந்த குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.

அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன்  தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்  நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக சைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்

இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் இருப்பதையே  விருபினார் இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு  காட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ்  தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்

மேலும் இந்த சம்பவத்தை கூறும் முன் அல்லாஹ்  கூறுகிறான் நபியே நிச்சயமாக நபி யூசுப் அலைஹி வசல்லம்  மற்றும் அவர்களது சகோதரர்களில் வரலாறில் வினவுபவருக்கு நிறைய படிப்பினை உண்டு

ஏன் இவ்வாறு அல்லாஹ்  கூறுகிறார் வினவுகிரரவர்க்கு அதனை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் சில பேர் கூறலாம் சகோதரர்கள் சகோதரருக்கே தீங்கிழைக்க முடியுமா என்று அதனை நிறைய விளக்கங்கள் கூறலாம் சொத்துகளுக்காக சகோதரர்களை கொள்ளும் அளவிற்கு துணியும் சகோதரர்களை நீங்கள் நிகழ் காலத்திலேயே காண முடியும் .

மேலும் அல்லாஹ்  கூறுகிறான் அந்த சகோதரர்கள் தங்களுக்குள் நாம்  பலசாலிகளாக பெரும் படையாக பத்து மக்கள் இருந்தும் நம் தந்தை அந்த இருவர் மீதுதான் பாசமாக இருக்கிறார் நிச்சயமாக நமது தந்தை பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்  ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து யூசுபை கொலை செய்துவிட வேண்டும் அல்லது அவரை எங்காவது  எரிந்துவிட வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுதுதான் நமது தந்தை நம்முடன் இணக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்கள்  மேலும் அந்த கூடத்தில் ஒருவர் கூறினார் நாம் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரை எங்காவது ஒரு பாழடைந்த கிணற்றில் நாம் எரிந்து விடுவோம் பிரயாணிகள் யாரவது வந்து அவரை எடுத்து கொல்லட்டும் என்று முடிவு செய்தார்கள்.  
பிறகு அவர் தங்களது தந்தையிடம் தந்தையே யூசுபுடைய விசியத்தில் நீங்கள் எங்களை நம்பாமல் இருப்பது உங்களுக்கு என்ன நேர்ந்தது அவருக்கு நாங்கள் நம்மையைதானே நாடுவோம் நாங்கள் அவரது சகோதரர்கள்தானே ஏன் ஏங்களிடம் இருந்து அவரை பிரித்து கொள்கிறீர்கள் 
.
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.

அதற்க்கு நமது தந்தை யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள்  கூறினார்கள் நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவர்  பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார் 

அதற்க்கு அவர்கள் ஒரு கூட்டத்தினராக  நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டக்வாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல்  அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள்  தள்ளி விட்டார்கள்

அப்பொழுது அல்லாஹ்  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதரர்களிடம்  கேட்பீர் என்று

அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள்   தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள் 

தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய்  அடித்து தின்று விட்டது .
நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள்

மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து நபி யாகூப் அளிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்   எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு  அந்த சட்டையை நபி யாகூப் அலைஹி  வசல்லம்  அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார் மேலும் அவர் கூறினார் இல்லை உங்களது மனம் ஒரு தீய காரியத்தை அழகாக காட்டிவிட்டது.  ஆகவே இந்த சம்பவத்திற்கு நான் பொறுமையாக இருப்பதே நன்று ஆகையால் யூசுபை காக்க அல்லாஹுவே போதுமானவன் அவனிடமே நான் உதவி தேடுகிறேன் என்று கூறினார் 

அந்த கிணற்றிற்கு அருகில் ஒரு பிரயாண கூட்டம் சென்ற பொழுது அந்த கிணற்றில்  நீர் எடுத்துகொள்ளலாம் என்று வாலியை  உள்ளே விட்டபொழுது அதை பிடித்து கொண்டே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்கள் மேல வந்துவிட்டார்கள் அதனை கண்ட அந்த மனிதர் இதோ ஓர் அழகிய சிறுவன் கிடைத்துவிட்டான் என்று நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களை சுட்டி காட்டி கூறினான் அப்பொழுது அவர்கள் அவரை வியாபார பொருளாக கருதி   சொற்ப விலைக்கு விற்று விட்டார்கள் மேலும் அவரை வாங்கி சென்ற மிசுறு நாட்டு இன்றைய வரைபடத்தில் எகிப்து நாட்டு வியாபாரி அவரை வாங்கி வந்து அந்த சிறுவனின்அழகை பார்த்து அவரை எகிப்து நாட்டு மந்திரியிடம் விற்று விட்டார் அவர் வாங்கி வந்து அவருடைய மனைவியை பார்த்து இந்த சிறுவனின் தங்குமிடத்தை பத்திரமாக பார்த்து கொள் இவர் நமக்கு பயன் தரலாம் அல்லது இவரை நாம் புத்திரனாக ஏற்று கொள்ளலாம் என்று கூறினார் மேலும் அல்லாஹ்  கூறுகிறான்  இவ்வாரே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களுக்கு நாம் இவ்வுலகில் இடமளித்தோம் மேலும் அவருக்கு  கனவுகளின்  விளக்கம் கூறும் ஆற்றலையும்  கற்று கொடுத்தோம் அல்லாஹுதான் அனைத்திலும் ஆட்சிபுரிபவன் ஆனால் இதை பெரும்பாலானோர்  அறியமாட்டார்கள் என்று கூறினான் ,

மேலும் நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களுடைய வாரலாரில் அவரின் இறை அச்சம் மட்டுமே மேலோங்கி நின்றது அவர் அல்லாஹுவிர்க்கு அடி பணிந்த விதம் அல்லாஹுவிர்க்காக தியாகம்  செய்த விதம் இவ்வாறு நாம் இருப்போமா என்பதை சிந்தித்து பார்த்துக்கொள்ளுங்கள்

மேலும் ஒரு முறை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் உரையாடி கொண்டிருக்கும் வேலையில் ஒரு சகாபி அல்லாஹுவின் தூதரே உலகத்தில் மிகவும் சங்கையானவர் யார் என்று வினா தொடுத்தனர்
அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சந்கையானவருடைய மகனுடைய சந்கையானவருடைய மகனுடைய
சந்கையானவருடைய மகன்
என்று பதில் கூறினார்கள் இது சகாபக்களுக்கு புரியவில்லை என்ன அல்லாஹுவின் தூதர் விடுகதையை போல் கூறுகிறார்களே என்று அதற்கு நமது நாயகம் முஹம்மத் சலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
 இபுராஹீமுடைய மகன் இஸ்ஹாக்
இஸ்ஹாக்குடைய மகன் யாகூப்
யாகூபுடைய மகன் யூசுப்  என்று பதில் கூறினார்கள்
ஏன் ஏன்றால் அல்லாஹ்  எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை தவிர யாருக்கும்  கொடுக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்

   நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் .

அல்லா கூறுகிறான் இன்னும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாலிபத்தை அடைந்த பொழுது அவர்களுக்கு மார்க்க அறிவையும்  சட்ட நுணுக்கங்களையும் கற்று கொடுத்தோம் இவ்வாரே நாம் நன்மை செய்வோருக்கு நாம் கூலியை தருகிறோம் .


நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின்  மனைவி அந்த பெண்ணின் பெயர் ஜுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்க படுகிறது அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடைய அழகில் மயங்கி அவர்கள் மேல் காதல் கொண்டால் மேலும் இவரை அடைய சந்தர்ப்பம் தேடி காத்துக்கொண்டிருந்த அந்த பெண் தன் கணவன் இல்லாதபொழுது  அந்த பெண் அணைத்து கதவுகளையும் மூடிவிட்டு என்னிடம் வாரும் என்றழைத்தால் அவ்வாறு அழைக்கும் தருவாயில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த தீய செயலில் இருந்து அல்லாஹுவிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் எனது எஜமான் என்னை நல்ல  முறையில் நடத்தும்பொழுது அவருக்கு துரோகம் இளைத்தால் அணியாயகாரர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று கூறினார் .மேலும் அநியாயக்காரர்கள் ஒரு பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள் என்று கூறினார் .

அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது திடமாக ஆசை கொண்டுவிட்டாள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹுவுடைய அச்சம் மட்டும் இல்லையெனில் அவரும் அந்த பெண்ணின் மீது இச்சை கொண்டிருப்பார் ஏன் அந்த பெண்ணும் அழகில் சளைத்தவள் அல்ல .

இப்பொழுது நாம் நம்மை பற்றி சிந்தித்து கொள்வோம் இவ்வாறு நாம் இதை போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டால்  நாம் எவ்வாறு நடந்துகொள்வோம் என்பதை உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள் .

மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்  நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் ஏழு கூட்டத்தினருக்கு அவனின் அருசின் நிழலை  கொடுப்பான்  அந்த எழு கூட்டத்தில் ஒரு கூட்டம் ஒரு அழகாண பெண் தன்னை இச்சைக்கு அழைத்த பொழுது தடுக்க யாரும் இல்லாத சமயத்தில் அல்லாஹுவை மட்டுமே அஞ்சி அந்த இடத்தை விட்டு யார் வெளி வருகிறாரோ அவர்க்கு அல்லாஹ்  அந்த பாக்கியத்தை கொடுப்பான் என்று நமது நாயகம் கூறி இருக்கிறார்  
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த பெண்ணிடம் இருந்து தற்காத்து கொள்ள வாசலின் பக்கம் ஓடினார் அவள் அதை தடுக்க அவரின் சட்டையை பின்புறமாக இழுத்தால் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டை கிழிந்து விட்டது வாசலில் அவளுடைய கணவரை இருவரும் கண்டதும் அவள் தப்பிக்க அவரிடம் உம்முடைய மனைவியை துன்புறுத்த நாடியவருக்கு என்ன தண்டனை உங்கள் சட்டத்தில் சிறை தண்டனையா அல்ல துன்புறுத்தும் தண்டனையா என்று கேட்டாள். அதற்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மறுத்து நான் அல்லாஹுவின் மீது ஆணையாக நான் எந்த தவறும் செய்ய வில்லை அவள்தான் என்னை வற்புறுத்தியதாக  கூறினார் அப்பொழுது இந்த சம்பவத்தை அல்லாஹ்  கூறுகிறான் அப்பொழுது அந்த குடும்பத்தில் இருந்து ஒரு சாட்சியாலனை அல்லாஹ்  ஏற்படுத்தினான் யார் அந்த சாட்சியாளன்
இதை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  மூன்று குழந்தைகளை அல்லாஹ் தொட்டிலில் இருக்கும் பொழுதே பேசவைதான் அதில் ஒருவர் மரியமின் மகன் ஈஸா அலைஹி வசல்லம் இரண்டாவது இபுனு ஜுரைஜ் என்றவரை அல்லாஹ் பேசவைதான் மூன்றாவதாக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சாட்சியாளனாக அல்லாஹ் பேச வைத்தான் என்று 

மேலும்  அல்லாஹ்  தனது திருமறையில் கூறும் அந்த வீட்டிலேயே சட்சியாலனாய் ஒரு பச்சிளம் குழந்தை அவருக்காக சாட்சி கூறுகிறது எவ்வாறு என்றால் அல்லாஹ்  அந்த சம்பவத்தை கூறுகிறான் அந்த வாலிபனுடைய சட்டை முன்புறமாக கிழிந்திருந்தால் அவள் உண்மை கூறுகிறாள் அந்த வாலிபன் பொய்யர்களில் உள்ளவராவார் அந்த வாலிபனின் சட்டை பின்புறமாக கிழிந்திருந்தால் அவர் உண்மையாளர் அந்த பெண் பொய்யர்களில் உள்ளவலாவாள்  என்று அந்த குழந்தை கூற நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் சட்டையை பார்த்தபொழுது   அந்த சட்டை பின்புறமாக கிழிந்திருந்ததை கண்ட அந்த பெண்ணின் கணவன்  அந்த பெண்ணிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சியே தவிர வேறில்லை மேலும் அவர் கூறினார் பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சி மிகவும் மகத்தானது என்று, இந்த வாக்கு எவ்வளவு உண்மை என்பதை இன்று கூட நாம் அறியலாம் எந்த பெண்ணாவது ஒரு ஆணை பார்த்து தவறாக கூறினால் உடனே நம்மக்கள் பெண்களின் பேச்சைத்தான் கேட்பார்கள் அதற்கு ஆயிரம் காரணம் கூறுவார்கள் . அதில் உண்மையும் இறக்கலாம் ஆனால் சில பொய்யான கூற்றையும் பெண்கள் கூறினால் அது நம்ப பட்டுவிடும் .

 இவ்வாறு அவர் கூறி அவர்  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்களிடம் யூசுபே நீர் இதனை புறக்கணித்து விடும் என்று கூறிவிட்டு அந்த பெண்ணை பார்த்து நீ அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்டுகொள் நிச்சயமாக நீ பாவம் செய்தவளாக இருக்கிறாய் என்று கூறினார்

இந்த விசியம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் கூறினார்கள் என்ன அமைச்சருடைய மனைவி தனது அடிமையிடம் காதல் கொண்டு தவறாக நடக்க பார்த்திருக்கிறாள் நிச்சயமாக அவள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறாள் என்று ஊர் பெண்கள் பலவாரியாக பேச தொடங்கி  விட்டனர் 
ஆவார்கள் பேசியவை அனைத்தும் அந்த பெண்மணி அறிந்த பொழுது அனைத்து பட்டின வாசிகளில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தாள்  அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு  அனைவருடைய கைகளிலும் ஒரு பலத்தையும் கத்தியையும் அவள் கொடுத்தாள்  அவர்கள் அந்த பலத்தை வெட்டும் சமயத்தில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை நீர் அந்த பெண்களுக்குள்  நடந்துவா  என்று கூறினாள் இந்த சூழ்ச்சி அறியாத நமது தந்தை  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்குள் செல்ல அவரின் அழகை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் கத்தியால் பலத்தை அறுப்பதற்கு  பதிலாக அவர்களுடைய கையை அறுத்து கொண்டார்கள்  மேலும் அந்த பெண்மணிகள் கூறினார்கள் இவர் நிச்சயம் ஒரு மனிதாரே இல்லை இவர் ஒரு மலக்காகதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுது அந்த பெண் மணி ஜுலைகா கூறினாள் எவரை பற்றி நீங்கள் என்னை இழிவு படுத்தி கொண்டிருந்தீர்களோ அந்த அடிமை இவர்தான் ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டி கொண்டீர்கள் நான் இவருடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனக்கு எவ்வாறு இருக்கும் என்று பதில் கூறினாள் .மேலும் அவள் கூறினாள் நான்தான் அவரை என் ஆசைக்கு இணங்குமாறு  அழைத்தேன் ஆனால் அவர் மனவுறுதியுடன் நின்றுவிட்டார் ஆனால் என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கபடுவார் அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள்

இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர் அல்லாஹுவிடம் பிராத்தித்தார் என்னுடைய ரட்சகனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறாரோ அதைவிட எனக்கு சிறைச்சாலையே எனக்கு விருப்பமானது  மேலும் இப்பெண்களின் சூழ்ச்சியில் இருந்து நீ என்னை காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் மேலும் அறிவீனர்களில் ஒருவராக நான் ஆகிவிடுவேன் என்று கூறினார் இந்த பிராத்தனையை  அங்கிகரித்த அல்லாஹ்  அந்த பெண்களின் சூழ்ச்சியை திருப்பிவிட்டான் என்று அல்லாஹ்  சாட்சி கூறுகிறான்.

இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் நம் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரை காக்க அவரை சிறையில் அடைத்தான்  பிறகு சிறிது காலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார் சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹுவின் ஆற்றலை மக்களுக்கு  எடுத்துரைத்து  இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டும் இருந்தார் இவ்வேளையில் அங்கு உள்ள சிறைவாசிகள் இருவர் கனவு கண்டார்கள் அதில் ஒருவர் நான் திராட்சை பலங்களில் இருந்து மதுரசம்  பிழிவதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் மேலும் மற்றொருவர் நான் என் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தி தின்பதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக மேலும் அறிவுஜீவியாகவே காண்கிறோம் ஆதலால் எங்களுக்கு இதன் விளக்கத்தை எங்களுக்கு கூறும் என்று கூறினார்கள்.

இதை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்  எனக்கு அருளிய இந்த அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் . என்று கூறி யார் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டாயோ நீ மிக விரைவில் விடுதளையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய் மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்  இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தி  தின்னும் இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் . மேலும்  விடுதலையாக  இருக்கும் அந்த சிறை தோழரிடம் நீர் வெளியில் சென்றவுடன்  என்னை பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக்கூறும் என்று கோரிக்கை விடுத்தார் ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்க செய்துவிட்டான் ஆதலால்  மேலும் சில காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது

பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஓர்  கனவு கண்டான் அதில் நல்ல கொளுத்த பசுக்களையும் மெலிந்த பசுக்களையும் மேய்வதை கண்டேன் அதில் ஏழு பசுமையான கதிர்களும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன் . என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரகூடியவராக இருந்தால்  இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள் என்று அந்த மன்னன் கேட்டான்
அதற்க்கு அந்த பிரதானிகள் இது பொய்யான கனவு அதற்க்கு விளக்கம் கொடுக்க நான் அறிந்திருக்க வில்லை என்று கூறினார்கள் இந்த சம்பவத்தை அறிந்த சிறையில் இருந்து விடுதலையான மனிதர் யூசுபை நினைவு கூர்ந்து அவர் மன்னரிடம் நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன் ஆனால் என்னை நீங்கள் சிறைகூடத்திர்க்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார் அவ்வாரே  அவரை அழைத்து செல்ல அங்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யுசுபே உண்மையாலரே எனக்கு மேலும் ஒரு  கனவிற்கு விளக்கம் தேவை என்று கூறினார் 

நபி யூசுப் அலைஹி வசல்லம் என்ன கனவு என்று கேட்க்க ஏழு கொளுத்த பசுவையும் மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும்  காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன என்று கேட்டார்  அதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை சேமித்து கொல்லுங்கள் அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும் அதில் உணவிற்கே கஷ்டம் வரும் அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் பிறகு ஒரு ஆண்டு வரும்  அதில் மழை பொழிந்துகொண்டே இருக்கும் அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிளிந்தவர்களாக  இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள் ,,

இவ்வாரே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள் இந்த விளக்கத்தை கேட்ட அரசம் இவ்விளக்கம் கொடுத்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினான் இதனை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கூறவந்த அந்த தூதுவனிடம் நீர் உன் எஜமானனிடம் போய்  கேள் கையை அறுத்துகொண்ட அந்த பெண்களின் நிலை என்ன என்று நிச்சயமாக அவர்களின் சூழ்ச்சியை என் ரட்சகன் நன்கரிந்தவன் என்று கூறினார் .

அதற்க்கு அந்த மன்னன் அந்த பெண்களை அழைத்து நீங்கள் யூசுபை கண்டு விரும்பியபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன என்று வினவினார் அதற்க்கு அந்த பெண்கள் அல்லாஹுவின் மீது ஆணையாக நிச்சயமாக நாங்கள் யாதொரு தீங்கையும் அவரிடம் காணவில்லை மேலும் அமைச்சரின் மனைவி சுலைகா உண்மை இப்பொழுது வெளிப்பட்டுவிட்டது நான் தான் அவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தேன் யூசுப் அதனை ஏற்க்கவில்லை நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவராவார் என்று கூறினாள்

இவ்வாறு நான் இதனை ஒத்துகொள்ள காரணம் நிச்சயமாக மறைவாக இருந்த சமையத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக துரோகிகளின்  சூழ்ச்சிக்கு அல்லாஹ்  வழிகாட்ட மாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறினாள் மேலும் நான் யூசுபின் மீது மோகம்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மை படுத்தவில்லை நிச்சயமாக ரட்சகன் அருள் புரிகின்றவர்களை அன்றி மனிதர்களுடைய மனம் பாவம் செய்ய தூண்டகூடியதாகவே இருக்கிறது நிச்சயமாக எனது ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று அந்த பெண் சுலைகா கூறினாள்

சிறைச்சாலையில் இருந்த நமது தந்தை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் அவரை அழைத்துவாருங்கள் அவரை எனக்கு மட்டும் பிரத்யோகமானவராக அமர்த்தி விடுகிறேன்  என்று கூறினார் அவ்வாரே  அவரை அழைத்து வரப்பட்டு யுசுபிடம் நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர் என்று கூறினான்

அதற்க்கு  நபி யூசுப் அலைஹி வசல்லம் என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கிவிடுங்கள்  என்று கோரினார் அதை பற்றி நன்கறிந்தவன் பாதுகாப்பவன் என்று கூறினார் அவ்வாரே  அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை ஆக்கினான்

இதனை தொடர்ந்து அல்லாஹ்  மூமின்களுக்கு ஒரு சுப செய்தியையும் தருகிறான்

மேலும் விசுவாசம்கொண்டு பயபக்தியுடயவர்கலாகவும் இருந்தார்களே  அவர்களுக்கு மறுமையின் கூலி மிகவும் மேலானதாக இருக்கும்

யூசுப்  12-57


பிறகு சிறிதுகாலத்தில் பஞ்சம் தொடங்கிவிட்டது அனைவரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் அப்பொழுது அரசவையில் சேமித்து வைக்கபட்ட பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள் அவரே கண்ஹானில் இருந்து யூசுபிடம்  அவர்களது சகோதர்கள் வந்தபொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார் இவர்கள்தான் நம்முடைய சகோதரர்கள் என்று ஆனால்  அவர்களுக்கு புலப்படவில்லை இவர்தான் யூசுப் என்று

இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து நீங்கள் மறுமுறை வரும்பொழுது உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்களது சகோதரன் புன்யாமினையும் அழைத்து வாருங்கள் அவ்வாறு நீங்கள் வந்தால் மேலும் உங்களுக்கு தானியங்களை கொடுக்கிறேன் என்று வாக்களித்தார் அவ்வாறு நீங்கள் அழைத்து வரா விட்டால் நீங்கள் என்னை நெருங்க வேண்டாம் என்னிடம் இருந்து எந்த ஒரு பொருளும் தரப்பட மாட்டாது என்று கூறினார்
இதனை கேட்ட அவர்கள் கூறினார்கள் நிச்சயம் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்று   கூறிவிட்டு தங்கள் தந்தையிடம் வந்து தந்தையே எங்களுக்கு தானியம் அளப்பது நிறுத்தப்பட்டுவிட்டது நாங்கள் புன்யாமினை அழைத்து சென்று பாதுகாப்புடன் கொண்டுவருவோம் அவருடன் அதிக தானியங்களை நமக்காக வாங்கியும் வருவோம் என்று கூறினார்கள்

அவரது தந்தை நபி யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் இவருடைய சகோதரர் யூசுபின் விசியத்தில் உங்களை நம்பியது போதும் இவரையும் நான் இழக்க தயாராக இல்லை என்று கூறினார் மேலும் பாதுகாப்பதில் அல்லாஹுவே மேலானவன் அவனையே நான் நம்புகிறேன் என்று கூறினார்

தந்தையே இனிமேல் நாங்கள் எதை தேடுவோம் நாங்கள் எங்கள் சகோதரன் புன்யாமினை அழைத்து சென்று நம் குடும்பத்திற்கு தேவையான தானியங்களை வாங்கி வருவோம் மேலும் எங்களது சகோதரனை பாதுகாப்புடன் அழைத்தும் வருவோம் என்று கூறினார்கள்
உங்கள் யாவரையும் ஆபத்து சூழ்ந்த்திருந்தால்  அன்றி இவரை பத்திரமாக திருப்பி கொண்டு வருவோம் என்று அல்லாஹ்வின் புறத்தில் எனக்கு சத்தியம் செய்யும் வரை நான் உங்களுடன் இவரை அனுப்ப மாட்டேன் .என்று கூறிவிட்டார் நபி யாகூப்  அலைஹி வசல்லம் .
அவர்களும் அல்லாஹுவின் புறத்தில் சத்தியமும் செய்துவிட்டார்கள் நாம்உறுதி மொழி எடுத்ததை அல்லாஹ்  சாட்சியாளனாக இருக்கிறான் என்று கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தார் நபி யாகூப்  அலைஹி வசல்லம் மேலும் அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன் என்று கூறினார்.

மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் எனது மக்களே நீங்கள் எகிப்து நாட்டினுள் போகும்பொழுது வேறு வேறு  வாசல் வழியாக  உள்ளே நுழையுங்கள் அல்லாஹு தடுத்ததை தவிர வேறு எதையும் நான் உங்களிடம் கூறவில்லை என்று கூறினார்

அவ்வாறே அவர்கள் எகிப்தை அடைந்ததும் அவர்கள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் புன்யாமினை காண்பித்தார்கள் அவர் புன்யாமினை தனிமையில் சந்தித்து நான் தான் உனது சகோதரன் யூசுப் இந்த செய்தியை நீ அவர்களிடம் கூற வேண்டாம் என்று வாக்குறுதி வாங்கினார் பிறகு அவர்களுக்கு தனித்தனியே தானிய முட்டைகள் வழங்கப்பட்டது புன்யாமினின் மூட்டையில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் குவளையை போட்டுவிட்டார் பிறகு சிறிது தூரம் சென்றவுடன் காவலாளிகள் அவர்களை அழைத்து நில்லுங்கள் மந்திரியின் முக்கியமான பொருள் காணாமல்  போய்விட்டது அதனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு  ஒரு ஒட்டகம்  நிறையாக தானியம் வழங்குவதாக அரசவையில் அறிவித்துவிட்டார்கள் நீங்கள் தான் கடைசியாக அங்கு வந்தீர்கள் நீங்கள்தான் எடுத்திருக்க கூடும் என்று அந்த காவலாளிகள் கூறினார்கள் அதற்கு புன்யாமீன்  சகோதரர்கள் பத்துபெரும் நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை அவ்வாறு எங்களிடம் அந்த பொருள் இருதால் அவரை நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் அவ்வாரே  அவர்களது தானிய மூட்டைகளை சோதித்தார்கள் யாரிடமும் இல்லை இறுதியாக புன்யாமினின் மூட்டையை சோதிக்கையில்  அதில் அந்த குவளையை கண்டதும் அதிர்ச்சியுற்றார்கள் பிறகு அந்த காவலாளிகள் நாங்கள் இவரை கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்க போகிறோம் என்று கூறினார்கள் அதற்க்கு அவர்கள் இவரின் தந்தை மிகவும் பலகீனமானவர் அவரிடம் இவருக்கு எந்த ஆபத்து வர விடமாட்டோம் என்று அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து கூட்டிவந்தோம்  ஆனால்  இப்பொழுது எங்களில் யாரேனும் நீங்கள் கைது செய்து இவரை விட்டு விடுங்கள் என்று கோரினார்கள் ஆனால்  அவர்கள் இல்லை அவ்வாறு செய்தால் நாங்கள் அணியாயகாரர்களில் உள்ளவராக மாறிவிடுவோம் ஆதலால் அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று புன்யாமினை அழைத்து சென்று விட்டார்கள்

அப்பொழுது அந்த பத்து சகோதரர்களும் என்ன செய்வது என்று அறியாமல்  இருந்தார்கள் வேறு வழியில்லை தந்தையிடம் கூறிவிடுவோம் என்று கூறி புரபட்டார்கள் அங்கு தந்தையிடம் கூறியபொழுது அவர் அதனை ஏற்க்க வில்லை இவ்வாறுதான் நீங்கள் யூசுபை அழைத்து சென்றீர்கள் இப்பொழுது அவன் சகோதரனையும் இவ்வாரே செய்துவிட்டீர்கள்   என்று அழ தொடங்கிவிட்டார்கள் நான் அல்லாஹுவின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறேன் அவனே எங்களை சேர்த்து வைக்க போதுமானவன். .

நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அழுது அழுது அவருடைய பார்வை மங்கிவிட்டது அழுதுகொண்டே இருப்பதை கண்ட அவருடைய பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் வேண்டுமென்றால் யூசுபை தேடி வருகிறோம் என்று கூறி மீண்டும் மிஸ்ரு நாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் அமைச்சரே எங்களுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார் எங்களுக்கு மேலும் நல்ல தானியங்கள் நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தந்தையை நன்கு  கவனித்து கொள்வோம் என்று கூறினார்கள் அப்பொழுது
 நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் உங்கள் சகோதரன் யூசுபை என்ன செய்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா என்று கேட்டார் அப்பொழுது அவருக்கு புலப்பட்டது அப்போ நீங்கள் தான் யூசுபோ என்று கேட்டார்கள் அதற்க்கு ஆம் நான்தான் யூசுப் இவர்தான் எனது சகோதரன் புன்யாமின் என்று கூறினார் அப்பொழுது அவர்கள் ஆச்சர்யபட்டு  எப்படி நீ மந்திரியானாய் என்று கேட்டார்கள் நாமாக இருந்தால் என்ன பதில் வந்திருக்கும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் தெரியுமா என்று ஒரு பக்கத்துக்கு கதை சொல்வோம் ஆனால் நமது தந்தை  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள்  அல்லாஹ்தான்  தான் நாடியவருக்கு அருளை பொழிகிறான் அவன்தான் என்னை உயர்த்தினான்  என்று கூறினார்கள் அப்பொழுது அந்த பத்து பெரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டோம் என்று கூறி அவர்கள் அஞ்சினார்கள் நம்மை யூசுப் பலிவாங்கிவிடுவாரோ  என்று ஆனால் அவர் தனது சகோதரர்களை பார்த்து இன்று நான் உங்கள் எந்த பலிவாங்களும்  நடத்தபோவதில்லை அல்லாஹ்  உங்களுடைய பாவத்தை மன்னிப்பான் என்று கூறினார் அப்பொழுது அந்த சகோதரர்கள் அவர்களது தந்தையை பற்றி ஞாபக படுத்தினார்கள் நமது தந்தை உங்கள் இருவரையும் நினைத்து அழுது அழுது அவருடைய கண்பார்வை மங்கிவிட்டது என்று கூறினார்கள் இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள் தனது சட்டையை அவர்கள் சகோதரர்களிடம் கொடுத்து இந்த சட்டையை அவர் முகத்தில் வையுங்கள் என்று கூறினார்
அவர்கள் அந்த சட்டையை எடுத்து கொண்டு வந்தபொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இது யூசுபின் வாசனை வருகிறது எங்கே எனது மகன் யூசுப் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் அந்த சட்டையை முகத்தில் போட்டு ஆம் இது யூசுபின் சட்டைதான் என்று கூறி அவரின் முகத்தில் போர்த்தினார்கள் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இழந்த பார்வை மீண்டும் வந்துவிட்டது . அப்பொழுது தன் பிள்ளைகளை பார்த்து கூறினார்கள் நான் உங்களிடம் கூறவில்லையா  அல்லாஹ்  உங்களுக்கு அறிவிக்காததை எனக்கு அறிவிக்கிறான் என்று கூறினார் அதனை கேட்ட அந்த பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் தீங்கிளைத்துவிட்டோம் என்குக்காக நீங்களும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார்கள் அதற்க்கு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் என்னுடைய பிள்ளைகளே நிச்சயமாக உங்களுக்காக நானும் பாவ மன்னிப்பு தேடுவேன் என்று கூறினார் பிறகு அவர்கள் அனைவரும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது கோட்டைக்கு சென்றார்கள் சென்ற அனைவரும் அவரின் தந்தை உட்பட அனைவரும் அவரின் காலில் விழுந்து சஜ்தா செய்தார்கள் செய்தவுடம்  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள் தன்  தந்தையிடம் தந்தையே நான் சிறு வயதில் ஒரு கனவு  கண்டேன் அல்லவா பதினோரு நட்சத்திரங்களும் ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் என் காலில் விழுவதை போல் அந்த கனவிற்கு இப்பொழுது நடந்த சம்பவே விளக்கம் என்று பதிலளித்தார்  அதன் பிறகு  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் நபி யாகூப் அலைஹி வசல்லம் 17 ஆண்டுகள் வாழ்த்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் இத்துடன் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு முடிவுற்றது.
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தமான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முழுவதும்  உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்

மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருள்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே அல்லாஹுவின் அருளால் learnislamichistory .blogspot .com  என்ற blog ல்    இந்த பதிவுகளை சில கருத்துகளுடன் இணைத்து வழங்கி இருக்கிறேன் இன்ஷா அல்லா அந்த பதிவையும் சற்று உபயோகித்து பாருங்கள் உங்களது கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் அல்லா ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு