Saturday, April 20, 2013

நபி யூசுப் அலைஹி வசல்லம் வரலாறு





பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக .

நண்பர்களே இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ்  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ் 

அல்லாஹ்  கூறுகிறான் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறை தொடங்கும் முன் நபியே நாம் உனக்கு இந்த குராரனை அறிவித்ததின் மூலமாக மிக்க அழகான வரலாற்றை உமக்கு கூறுகிறோம் நித்ச்சயம் நீர் இதனை   பற்றி அறியாதவராய் இருந்தீர்

இவ்வாறு அல்லாஹ்  தனது வார்த்தையிலேயே அழகாண வரலாறு என்று கூறுகிறான் அப்படி என்ன அழகாண வரலாறு இன்ஷா அல்லா காண்போம் ,,

நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்தமனைவி "ரய்யா"வின் குழந்தைகள் 10 பேர் இரண்டாவது மனைவி "ராஹில்"லின் வாயிலாக பிறந்த குழந்தைகள் இரண்டு  அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராஹில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள் இவர்களது வரலாறு முந்தய நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறில்  நீங்கள் காணலாம்.

இவ்வாறு தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள் மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மிக அழகானவர்களாக இருந்ததும் காரணாமாக உலமாக்கள் கூறுகிறார்கள்.

நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக உலமாக்களின் வாயிலாக கேட்டிருக்கிறேன் அல்லாஹ்  அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ்  இரு பாதியாக  பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கும்  மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லாஹ் பங்கிட்டு  வழங்கியதாக சுபுஹானல்லாஹ்  இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது தந்தை அவர்கள் மீதும்  அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் அதனை கண்ட யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க  தொடங்கிவிட்டார்கள் ஏன்  என்றால் நாமும் இவரை பராமரிக்காவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆட்பட்டுவிடுவார்கள்  என்று அஞ்சினார்கள் 

இந்த சம்பவத்தில் நமக்கு ஒரு சிறு படிப்பினைக்காக நான் ஒரு தகவலை தருகிறேன் இவ்வாறு பல  பிள்ளைகள் இருக்க ஒரு பிள்ளைகள் மீது நாம் பாசம் காட்டுவது இப்பொழுது நாகரிகமாக மாறிவருகிறது இவ்வாறு செய்யலாமா இவ்வாறு செய்வதாக இருந்தால் எப்பொழுது செய்ய வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழும்பலாம் இந்த சம்பவங்களை பற்றி நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் ஏதேனும் கூறி இருக்கிறார்களா ஆம் கூறி இருக்கிறார்கள்

நபி சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் கலந்துரையாடி கொண்டிருக்கும் வேளையில்  ஒரு சகாபியின் பிள்ளை வந்ததும் அந்த சகாபி அந்த பிள்ளையை மடியில் அமர்த்தி அவனுக்கு முத்தம் கொடுத்தார் இதனை கண்ட நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அந்த சஹாபியிடம் நீங்கள் இந்த குழந்தையுடன் நடப்பதுபோல்தான் உங்கள் மற்ற குழந்தைகளுடன் நடப்பீர்களா இவ்வாறுதான் அவர்களையும் கொஞ்சுவீர்களா என்று கேட்டார்கள் அதற்கு அந்த சகாபி இல்லை அல்லாஹுவின் தூதரே இந்த பிள்ளை மீதுதான் எனக்கு பாசம் அதிகம் என்று பதில் கூறினார் அப்பொழுது அல்லாஹுவின் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்  மறுமை நாளில் மற்றபிள்ளைகள் உங்கள்மீது வழக்கு தொடுப்பார்கள் என்று கூறினார்கள் 
ஆனால் ஒரு சில காரணங்களால் சில பிள்ளைகள் மேல் கவனம் கொள்ள அனுமதி உள்ளதாக உலமாக்கள் கூறுகிறார்கள் சில பிள்ளைகள் மாற்று திறனாளிகளாக  அல்ல மூளை வளர்ச்சி குன்றியவராக அல்ல அதிகமாக நோய்வாய் படும் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையிடம் சற்று கூடுதலாக அக்கறை எடுப்பதில் குற்றம் இல்லை . இப்பொழுது நம்மை பற்றி யோசிப்போம்  அவ்வாறுதான்  நாம் வாழ்கிறோமா  நான் கண்ட சில பேர்  கூறுவார்கள் மூத்த பிள்ளை மீது அதிக பாசம் இருப்பதாக சிலபேர் கடைக்குட்டி என்று கூறி அந்த பிள்ளையிடம் அதிக பாசம் காட்டுவது சில பேர் படிக்கும் பிள்ளையிடம் அதிகமாக பாசம் காட்டுவது படிக்காத பிள்ளை என்றால் ஏலமாக பேசுவது மேலும் சில பிள்ளைகளை எடுத்துக்கொண்டு இந்த பிள்ளைதான் எனக்கு ராசியான குழந்தை இவர் பிறந்த பிறகுதான் எனக்கு பரக்கத் வந்தது என்று கூறுகிறார்கள் இத்தகைய செயல்கள் அணைத்து சைத்தானின்  செயல்கள் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை ஆகையால் தங்கள் பிள்ளைகளை சமாமாக பாவித்து வளர்க்கவே அல்லாஹுவும் அல்லாஹுவின் தூதரும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் ஆதலால் நண்பர்களே அல்லாஹுவிர்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்  உங்களது பிள்ளைகள் மறுமையில் அல்லாவிடம் வழக்கு தொடுத்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து செயல் படுங்கள் .

 நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் நேசிக்க காரணம் அந்த குழந்தைகள் தனது தாயில்லாமல்  கஷ்டபடுவதால் அந்த குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.

அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன்  தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்  நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக சைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்

இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் இருப்பதையே  விருபினார் இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு  காட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ்  தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்

மேலும் இந்த சம்பவத்தை கூறும் முன் அல்லாஹ்  கூறுகிறான் நபியே நிச்சயமாக நபி யூசுப் அலைஹி வசல்லம்  மற்றும் அவர்களது சகோதரர்களில் வரலாறில் வினவுபவருக்கு நிறைய படிப்பினை உண்டு

ஏன் இவ்வாறு அல்லாஹ்  கூறுகிறார் வினவுகிரரவர்க்கு அதனை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் சில பேர் கூறலாம் சகோதரர்கள் சகோதரருக்கே தீங்கிழைக்க முடியுமா என்று அதனை நிறைய விளக்கங்கள் கூறலாம் சொத்துகளுக்காக சகோதரர்களை கொள்ளும் அளவிற்கு துணியும் சகோதரர்களை நீங்கள் நிகழ் காலத்திலேயே காண முடியும் .

மேலும் அல்லாஹ்  கூறுகிறான் அந்த சகோதரர்கள் தங்களுக்குள் நாம்  பலசாலிகளாக பெரும் படையாக பத்து மக்கள் இருந்தும் நம் தந்தை அந்த இருவர் மீதுதான் பாசமாக இருக்கிறார் நிச்சயமாக நமது தந்தை பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்  ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து யூசுபை கொலை செய்துவிட வேண்டும் அல்லது அவரை எங்காவது  எரிந்துவிட வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுதுதான் நமது தந்தை நம்முடன் இணக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்கள்  மேலும் அந்த கூடத்தில் ஒருவர் கூறினார் நாம் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரை எங்காவது ஒரு பாழடைந்த கிணற்றில் நாம் எரிந்து விடுவோம் பிரயாணிகள் யாரவது வந்து அவரை எடுத்து கொல்லட்டும் என்று முடிவு செய்தார்கள்.  
பிறகு அவர் தங்களது தந்தையிடம் தந்தையே யூசுபுடைய விசியத்தில் நீங்கள் எங்களை நம்பாமல் இருப்பது உங்களுக்கு என்ன நேர்ந்தது அவருக்கு நாங்கள் நம்மையைதானே நாடுவோம் நாங்கள் அவரது சகோதரர்கள்தானே ஏன் ஏங்களிடம் இருந்து அவரை பிரித்து கொள்கிறீர்கள் 
.
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.

அதற்க்கு நமது தந்தை யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள்  கூறினார்கள் நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவர்  பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார் 

அதற்க்கு அவர்கள் ஒரு கூட்டத்தினராக  நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டக்வாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல்  அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள்  தள்ளி விட்டார்கள்

அப்பொழுது அல்லாஹ்  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதரர்களிடம்  கேட்பீர் என்று

அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள்   தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள் 

தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய்  அடித்து தின்று விட்டது .
நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள்

மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து நபி யாகூப் அளிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்   எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு  அந்த சட்டையை நபி யாகூப் அலைஹி  வசல்லம்  அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார் மேலும் அவர் கூறினார் இல்லை உங்களது மனம் ஒரு தீய காரியத்தை அழகாக காட்டிவிட்டது.  ஆகவே இந்த சம்பவத்திற்கு நான் பொறுமையாக இருப்பதே நன்று ஆகையால் யூசுபை காக்க அல்லாஹுவே போதுமானவன் அவனிடமே நான் உதவி தேடுகிறேன் என்று கூறினார் 

அந்த கிணற்றிற்கு அருகில் ஒரு பிரயாண கூட்டம் சென்ற பொழுது அந்த கிணற்றில்  நீர் எடுத்துகொள்ளலாம் என்று வாலியை  உள்ளே விட்டபொழுது அதை பிடித்து கொண்டே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்கள் மேல வந்துவிட்டார்கள் அதனை கண்ட அந்த மனிதர் இதோ ஓர் அழகிய சிறுவன் கிடைத்துவிட்டான் என்று நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களை சுட்டி காட்டி கூறினான் அப்பொழுது அவர்கள் அவரை வியாபார பொருளாக கருதி   சொற்ப விலைக்கு விற்று விட்டார்கள் மேலும் அவரை வாங்கி சென்ற மிசுறு நாட்டு இன்றைய வரைபடத்தில் எகிப்து நாட்டு வியாபாரி அவரை வாங்கி வந்து அந்த சிறுவனின்அழகை பார்த்து அவரை எகிப்து நாட்டு மந்திரியிடம் விற்று விட்டார் அவர் வாங்கி வந்து அவருடைய மனைவியை பார்த்து இந்த சிறுவனின் தங்குமிடத்தை பத்திரமாக பார்த்து கொள் இவர் நமக்கு பயன் தரலாம் அல்லது இவரை நாம் புத்திரனாக ஏற்று கொள்ளலாம் என்று கூறினார் மேலும் அல்லாஹ்  கூறுகிறான்  இவ்வாரே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களுக்கு நாம் இவ்வுலகில் இடமளித்தோம் மேலும் அவருக்கு  கனவுகளின்  விளக்கம் கூறும் ஆற்றலையும்  கற்று கொடுத்தோம் அல்லாஹுதான் அனைத்திலும் ஆட்சிபுரிபவன் ஆனால் இதை பெரும்பாலானோர்  அறியமாட்டார்கள் என்று கூறினான் ,

மேலும் நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களுடைய வாரலாரில் அவரின் இறை அச்சம் மட்டுமே மேலோங்கி நின்றது அவர் அல்லாஹுவிர்க்கு அடி பணிந்த விதம் அல்லாஹுவிர்க்காக தியாகம்  செய்த விதம் இவ்வாறு நாம் இருப்போமா என்பதை சிந்தித்து பார்த்துக்கொள்ளுங்கள்

மேலும் ஒரு முறை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் உரையாடி கொண்டிருக்கும் வேலையில் ஒரு சகாபி அல்லாஹுவின் தூதரே உலகத்தில் மிகவும் சங்கையானவர் யார் என்று வினா தொடுத்தனர்
அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சந்கையானவருடைய மகனுடைய சந்கையானவருடைய மகனுடைய
சந்கையானவருடைய மகன்
என்று பதில் கூறினார்கள் இது சகாபக்களுக்கு புரியவில்லை என்ன அல்லாஹுவின் தூதர் விடுகதையை போல் கூறுகிறார்களே என்று அதற்கு நமது நாயகம் முஹம்மத் சலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
 இபுராஹீமுடைய மகன் இஸ்ஹாக்
இஸ்ஹாக்குடைய மகன் யாகூப்
யாகூபுடைய மகன் யூசுப்  என்று பதில் கூறினார்கள்
ஏன் ஏன்றால் அல்லாஹ்  எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை தவிர யாருக்கும்  கொடுக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்

   நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் .

அல்லா கூறுகிறான் இன்னும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாலிபத்தை அடைந்த பொழுது அவர்களுக்கு மார்க்க அறிவையும்  சட்ட நுணுக்கங்களையும் கற்று கொடுத்தோம் இவ்வாரே நாம் நன்மை செய்வோருக்கு நாம் கூலியை தருகிறோம் .


நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின்  மனைவி அந்த பெண்ணின் பெயர் ஜுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்க படுகிறது அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடைய அழகில் மயங்கி அவர்கள் மேல் காதல் கொண்டால் மேலும் இவரை அடைய சந்தர்ப்பம் தேடி காத்துக்கொண்டிருந்த அந்த பெண் தன் கணவன் இல்லாதபொழுது  அந்த பெண் அணைத்து கதவுகளையும் மூடிவிட்டு என்னிடம் வாரும் என்றழைத்தால் அவ்வாறு அழைக்கும் தருவாயில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த தீய செயலில் இருந்து அல்லாஹுவிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் எனது எஜமான் என்னை நல்ல  முறையில் நடத்தும்பொழுது அவருக்கு துரோகம் இளைத்தால் அணியாயகாரர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று கூறினார் .மேலும் அநியாயக்காரர்கள் ஒரு பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள் என்று கூறினார் .

அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது திடமாக ஆசை கொண்டுவிட்டாள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹுவுடைய அச்சம் மட்டும் இல்லையெனில் அவரும் அந்த பெண்ணின் மீது இச்சை கொண்டிருப்பார் ஏன் அந்த பெண்ணும் அழகில் சளைத்தவள் அல்ல .

இப்பொழுது நாம் நம்மை பற்றி சிந்தித்து கொள்வோம் இவ்வாறு நாம் இதை போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டால்  நாம் எவ்வாறு நடந்துகொள்வோம் என்பதை உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள் .

மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்  நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் ஏழு கூட்டத்தினருக்கு அவனின் அருசின் நிழலை  கொடுப்பான்  அந்த எழு கூட்டத்தில் ஒரு கூட்டம் ஒரு அழகாண பெண் தன்னை இச்சைக்கு அழைத்த பொழுது தடுக்க யாரும் இல்லாத சமயத்தில் அல்லாஹுவை மட்டுமே அஞ்சி அந்த இடத்தை விட்டு யார் வெளி வருகிறாரோ அவர்க்கு அல்லாஹ்  அந்த பாக்கியத்தை கொடுப்பான் என்று நமது நாயகம் கூறி இருக்கிறார்  
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த பெண்ணிடம் இருந்து தற்காத்து கொள்ள வாசலின் பக்கம் ஓடினார் அவள் அதை தடுக்க அவரின் சட்டையை பின்புறமாக இழுத்தால் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டை கிழிந்து விட்டது வாசலில் அவளுடைய கணவரை இருவரும் கண்டதும் அவள் தப்பிக்க அவரிடம் உம்முடைய மனைவியை துன்புறுத்த நாடியவருக்கு என்ன தண்டனை உங்கள் சட்டத்தில் சிறை தண்டனையா அல்ல துன்புறுத்தும் தண்டனையா என்று கேட்டாள். அதற்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மறுத்து நான் அல்லாஹுவின் மீது ஆணையாக நான் எந்த தவறும் செய்ய வில்லை அவள்தான் என்னை வற்புறுத்தியதாக  கூறினார் அப்பொழுது இந்த சம்பவத்தை அல்லாஹ்  கூறுகிறான் அப்பொழுது அந்த குடும்பத்தில் இருந்து ஒரு சாட்சியாலனை அல்லாஹ்  ஏற்படுத்தினான் யார் அந்த சாட்சியாளன்
இதை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  மூன்று குழந்தைகளை அல்லாஹ் தொட்டிலில் இருக்கும் பொழுதே பேசவைதான் அதில் ஒருவர் மரியமின் மகன் ஈஸா அலைஹி வசல்லம் இரண்டாவது இபுனு ஜுரைஜ் என்றவரை அல்லாஹ் பேசவைதான் மூன்றாவதாக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சாட்சியாளனாக அல்லாஹ் பேச வைத்தான் என்று 

மேலும்  அல்லாஹ்  தனது திருமறையில் கூறும் அந்த வீட்டிலேயே சட்சியாலனாய் ஒரு பச்சிளம் குழந்தை அவருக்காக சாட்சி கூறுகிறது எவ்வாறு என்றால் அல்லாஹ்  அந்த சம்பவத்தை கூறுகிறான் அந்த வாலிபனுடைய சட்டை முன்புறமாக கிழிந்திருந்தால் அவள் உண்மை கூறுகிறாள் அந்த வாலிபன் பொய்யர்களில் உள்ளவராவார் அந்த வாலிபனின் சட்டை பின்புறமாக கிழிந்திருந்தால் அவர் உண்மையாளர் அந்த பெண் பொய்யர்களில் உள்ளவலாவாள்  என்று அந்த குழந்தை கூற நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் சட்டையை பார்த்தபொழுது   அந்த சட்டை பின்புறமாக கிழிந்திருந்ததை கண்ட அந்த பெண்ணின் கணவன்  அந்த பெண்ணிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சியே தவிர வேறில்லை மேலும் அவர் கூறினார் பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சி மிகவும் மகத்தானது என்று, இந்த வாக்கு எவ்வளவு உண்மை என்பதை இன்று கூட நாம் அறியலாம் எந்த பெண்ணாவது ஒரு ஆணை பார்த்து தவறாக கூறினால் உடனே நம்மக்கள் பெண்களின் பேச்சைத்தான் கேட்பார்கள் அதற்கு ஆயிரம் காரணம் கூறுவார்கள் . அதில் உண்மையும் இறக்கலாம் ஆனால் சில பொய்யான கூற்றையும் பெண்கள் கூறினால் அது நம்ப பட்டுவிடும் .

 இவ்வாறு அவர் கூறி அவர்  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்களிடம் யூசுபே நீர் இதனை புறக்கணித்து விடும் என்று கூறிவிட்டு அந்த பெண்ணை பார்த்து நீ அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்டுகொள் நிச்சயமாக நீ பாவம் செய்தவளாக இருக்கிறாய் என்று கூறினார்

இந்த விசியம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் கூறினார்கள் என்ன அமைச்சருடைய மனைவி தனது அடிமையிடம் காதல் கொண்டு தவறாக நடக்க பார்த்திருக்கிறாள் நிச்சயமாக அவள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறாள் என்று ஊர் பெண்கள் பலவாரியாக பேச தொடங்கி  விட்டனர் 
ஆவார்கள் பேசியவை அனைத்தும் அந்த பெண்மணி அறிந்த பொழுது அனைத்து பட்டின வாசிகளில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தாள்  அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு  அனைவருடைய கைகளிலும் ஒரு பலத்தையும் கத்தியையும் அவள் கொடுத்தாள்  அவர்கள் அந்த பலத்தை வெட்டும் சமயத்தில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை நீர் அந்த பெண்களுக்குள்  நடந்துவா  என்று கூறினாள் இந்த சூழ்ச்சி அறியாத நமது தந்தை  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்குள் செல்ல அவரின் அழகை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் கத்தியால் பலத்தை அறுப்பதற்கு  பதிலாக அவர்களுடைய கையை அறுத்து கொண்டார்கள்  மேலும் அந்த பெண்மணிகள் கூறினார்கள் இவர் நிச்சயம் ஒரு மனிதாரே இல்லை இவர் ஒரு மலக்காகதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுது அந்த பெண் மணி ஜுலைகா கூறினாள் எவரை பற்றி நீங்கள் என்னை இழிவு படுத்தி கொண்டிருந்தீர்களோ அந்த அடிமை இவர்தான் ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டி கொண்டீர்கள் நான் இவருடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனக்கு எவ்வாறு இருக்கும் என்று பதில் கூறினாள் .மேலும் அவள் கூறினாள் நான்தான் அவரை என் ஆசைக்கு இணங்குமாறு  அழைத்தேன் ஆனால் அவர் மனவுறுதியுடன் நின்றுவிட்டார் ஆனால் என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கபடுவார் அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள்

இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர் அல்லாஹுவிடம் பிராத்தித்தார் என்னுடைய ரட்சகனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறாரோ அதைவிட எனக்கு சிறைச்சாலையே எனக்கு விருப்பமானது  மேலும் இப்பெண்களின் சூழ்ச்சியில் இருந்து நீ என்னை காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் மேலும் அறிவீனர்களில் ஒருவராக நான் ஆகிவிடுவேன் என்று கூறினார் இந்த பிராத்தனையை  அங்கிகரித்த அல்லாஹ்  அந்த பெண்களின் சூழ்ச்சியை திருப்பிவிட்டான் என்று அல்லாஹ்  சாட்சி கூறுகிறான்.

இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் நம் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரை காக்க அவரை சிறையில் அடைத்தான்  பிறகு சிறிது காலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார் சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹுவின் ஆற்றலை மக்களுக்கு  எடுத்துரைத்து  இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டும் இருந்தார் இவ்வேளையில் அங்கு உள்ள சிறைவாசிகள் இருவர் கனவு கண்டார்கள் அதில் ஒருவர் நான் திராட்சை பலங்களில் இருந்து மதுரசம்  பிழிவதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் மேலும் மற்றொருவர் நான் என் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தி தின்பதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக மேலும் அறிவுஜீவியாகவே காண்கிறோம் ஆதலால் எங்களுக்கு இதன் விளக்கத்தை எங்களுக்கு கூறும் என்று கூறினார்கள்.

இதை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்  எனக்கு அருளிய இந்த அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் . என்று கூறி யார் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டாயோ நீ மிக விரைவில் விடுதளையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய் மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்  இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தி  தின்னும் இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் . மேலும்  விடுதலையாக  இருக்கும் அந்த சிறை தோழரிடம் நீர் வெளியில் சென்றவுடன்  என்னை பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக்கூறும் என்று கோரிக்கை விடுத்தார் ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்க செய்துவிட்டான் ஆதலால்  மேலும் சில காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது

பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஓர்  கனவு கண்டான் அதில் நல்ல கொளுத்த பசுக்களையும் மெலிந்த பசுக்களையும் மேய்வதை கண்டேன் அதில் ஏழு பசுமையான கதிர்களும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன் . என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரகூடியவராக இருந்தால்  இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள் என்று அந்த மன்னன் கேட்டான்
அதற்க்கு அந்த பிரதானிகள் இது பொய்யான கனவு அதற்க்கு விளக்கம் கொடுக்க நான் அறிந்திருக்க வில்லை என்று கூறினார்கள் இந்த சம்பவத்தை அறிந்த சிறையில் இருந்து விடுதலையான மனிதர் யூசுபை நினைவு கூர்ந்து அவர் மன்னரிடம் நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன் ஆனால் என்னை நீங்கள் சிறைகூடத்திர்க்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார் அவ்வாரே  அவரை அழைத்து செல்ல அங்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யுசுபே உண்மையாலரே எனக்கு மேலும் ஒரு  கனவிற்கு விளக்கம் தேவை என்று கூறினார் 

நபி யூசுப் அலைஹி வசல்லம் என்ன கனவு என்று கேட்க்க ஏழு கொளுத்த பசுவையும் மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும்  காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன என்று கேட்டார்  அதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை சேமித்து கொல்லுங்கள் அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும் அதில் உணவிற்கே கஷ்டம் வரும் அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் பிறகு ஒரு ஆண்டு வரும்  அதில் மழை பொழிந்துகொண்டே இருக்கும் அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிளிந்தவர்களாக  இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள் ,,

இவ்வாரே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள் இந்த விளக்கத்தை கேட்ட அரசம் இவ்விளக்கம் கொடுத்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினான் இதனை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கூறவந்த அந்த தூதுவனிடம் நீர் உன் எஜமானனிடம் போய்  கேள் கையை அறுத்துகொண்ட அந்த பெண்களின் நிலை என்ன என்று நிச்சயமாக அவர்களின் சூழ்ச்சியை என் ரட்சகன் நன்கரிந்தவன் என்று கூறினார் .

அதற்க்கு அந்த மன்னன் அந்த பெண்களை அழைத்து நீங்கள் யூசுபை கண்டு விரும்பியபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன என்று வினவினார் அதற்க்கு அந்த பெண்கள் அல்லாஹுவின் மீது ஆணையாக நிச்சயமாக நாங்கள் யாதொரு தீங்கையும் அவரிடம் காணவில்லை மேலும் அமைச்சரின் மனைவி சுலைகா உண்மை இப்பொழுது வெளிப்பட்டுவிட்டது நான் தான் அவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தேன் யூசுப் அதனை ஏற்க்கவில்லை நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவராவார் என்று கூறினாள்

இவ்வாறு நான் இதனை ஒத்துகொள்ள காரணம் நிச்சயமாக மறைவாக இருந்த சமையத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக துரோகிகளின்  சூழ்ச்சிக்கு அல்லாஹ்  வழிகாட்ட மாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறினாள் மேலும் நான் யூசுபின் மீது மோகம்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மை படுத்தவில்லை நிச்சயமாக ரட்சகன் அருள் புரிகின்றவர்களை அன்றி மனிதர்களுடைய மனம் பாவம் செய்ய தூண்டகூடியதாகவே இருக்கிறது நிச்சயமாக எனது ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று அந்த பெண் சுலைகா கூறினாள்

சிறைச்சாலையில் இருந்த நமது தந்தை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் அவரை அழைத்துவாருங்கள் அவரை எனக்கு மட்டும் பிரத்யோகமானவராக அமர்த்தி விடுகிறேன்  என்று கூறினார் அவ்வாரே  அவரை அழைத்து வரப்பட்டு யுசுபிடம் நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர் என்று கூறினான்

அதற்க்கு  நபி யூசுப் அலைஹி வசல்லம் என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கிவிடுங்கள்  என்று கோரினார் அதை பற்றி நன்கறிந்தவன் பாதுகாப்பவன் என்று கூறினார் அவ்வாரே  அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை ஆக்கினான்

இதனை தொடர்ந்து அல்லாஹ்  மூமின்களுக்கு ஒரு சுப செய்தியையும் தருகிறான்

மேலும் விசுவாசம்கொண்டு பயபக்தியுடயவர்கலாகவும் இருந்தார்களே  அவர்களுக்கு மறுமையின் கூலி மிகவும் மேலானதாக இருக்கும்

யூசுப்  12-57


பிறகு சிறிதுகாலத்தில் பஞ்சம் தொடங்கிவிட்டது அனைவரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் அப்பொழுது அரசவையில் சேமித்து வைக்கபட்ட பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள் அவரே கண்ஹானில் இருந்து யூசுபிடம்  அவர்களது சகோதர்கள் வந்தபொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார் இவர்கள்தான் நம்முடைய சகோதரர்கள் என்று ஆனால்  அவர்களுக்கு புலப்படவில்லை இவர்தான் யூசுப் என்று

இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து நீங்கள் மறுமுறை வரும்பொழுது உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்களது சகோதரன் புன்யாமினையும் அழைத்து வாருங்கள் அவ்வாறு நீங்கள் வந்தால் மேலும் உங்களுக்கு தானியங்களை கொடுக்கிறேன் என்று வாக்களித்தார் அவ்வாறு நீங்கள் அழைத்து வரா விட்டால் நீங்கள் என்னை நெருங்க வேண்டாம் என்னிடம் இருந்து எந்த ஒரு பொருளும் தரப்பட மாட்டாது என்று கூறினார்
இதனை கேட்ட அவர்கள் கூறினார்கள் நிச்சயம் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்று   கூறிவிட்டு தங்கள் தந்தையிடம் வந்து தந்தையே எங்களுக்கு தானியம் அளப்பது நிறுத்தப்பட்டுவிட்டது நாங்கள் புன்யாமினை அழைத்து சென்று பாதுகாப்புடன் கொண்டுவருவோம் அவருடன் அதிக தானியங்களை நமக்காக வாங்கியும் வருவோம் என்று கூறினார்கள்

அவரது தந்தை நபி யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் இவருடைய சகோதரர் யூசுபின் விசியத்தில் உங்களை நம்பியது போதும் இவரையும் நான் இழக்க தயாராக இல்லை என்று கூறினார் மேலும் பாதுகாப்பதில் அல்லாஹுவே மேலானவன் அவனையே நான் நம்புகிறேன் என்று கூறினார்

தந்தையே இனிமேல் நாங்கள் எதை தேடுவோம் நாங்கள் எங்கள் சகோதரன் புன்யாமினை அழைத்து சென்று நம் குடும்பத்திற்கு தேவையான தானியங்களை வாங்கி வருவோம் மேலும் எங்களது சகோதரனை பாதுகாப்புடன் அழைத்தும் வருவோம் என்று கூறினார்கள்
உங்கள் யாவரையும் ஆபத்து சூழ்ந்த்திருந்தால்  அன்றி இவரை பத்திரமாக திருப்பி கொண்டு வருவோம் என்று அல்லாஹ்வின் புறத்தில் எனக்கு சத்தியம் செய்யும் வரை நான் உங்களுடன் இவரை அனுப்ப மாட்டேன் .என்று கூறிவிட்டார் நபி யாகூப்  அலைஹி வசல்லம் .
அவர்களும் அல்லாஹுவின் புறத்தில் சத்தியமும் செய்துவிட்டார்கள் நாம்உறுதி மொழி எடுத்ததை அல்லாஹ்  சாட்சியாளனாக இருக்கிறான் என்று கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தார் நபி யாகூப்  அலைஹி வசல்லம் மேலும் அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன் என்று கூறினார்.

மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் எனது மக்களே நீங்கள் எகிப்து நாட்டினுள் போகும்பொழுது வேறு வேறு  வாசல் வழியாக  உள்ளே நுழையுங்கள் அல்லாஹு தடுத்ததை தவிர வேறு எதையும் நான் உங்களிடம் கூறவில்லை என்று கூறினார்

அவ்வாறே அவர்கள் எகிப்தை அடைந்ததும் அவர்கள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் புன்யாமினை காண்பித்தார்கள் அவர் புன்யாமினை தனிமையில் சந்தித்து நான் தான் உனது சகோதரன் யூசுப் இந்த செய்தியை நீ அவர்களிடம் கூற வேண்டாம் என்று வாக்குறுதி வாங்கினார் பிறகு அவர்களுக்கு தனித்தனியே தானிய முட்டைகள் வழங்கப்பட்டது புன்யாமினின் மூட்டையில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் குவளையை போட்டுவிட்டார் பிறகு சிறிது தூரம் சென்றவுடன் காவலாளிகள் அவர்களை அழைத்து நில்லுங்கள் மந்திரியின் முக்கியமான பொருள் காணாமல்  போய்விட்டது அதனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு  ஒரு ஒட்டகம்  நிறையாக தானியம் வழங்குவதாக அரசவையில் அறிவித்துவிட்டார்கள் நீங்கள் தான் கடைசியாக அங்கு வந்தீர்கள் நீங்கள்தான் எடுத்திருக்க கூடும் என்று அந்த காவலாளிகள் கூறினார்கள் அதற்கு புன்யாமீன்  சகோதரர்கள் பத்துபெரும் நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை அவ்வாறு எங்களிடம் அந்த பொருள் இருதால் அவரை நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் அவ்வாரே  அவர்களது தானிய மூட்டைகளை சோதித்தார்கள் யாரிடமும் இல்லை இறுதியாக புன்யாமினின் மூட்டையை சோதிக்கையில்  அதில் அந்த குவளையை கண்டதும் அதிர்ச்சியுற்றார்கள் பிறகு அந்த காவலாளிகள் நாங்கள் இவரை கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்க போகிறோம் என்று கூறினார்கள் அதற்க்கு அவர்கள் இவரின் தந்தை மிகவும் பலகீனமானவர் அவரிடம் இவருக்கு எந்த ஆபத்து வர விடமாட்டோம் என்று அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து கூட்டிவந்தோம்  ஆனால்  இப்பொழுது எங்களில் யாரேனும் நீங்கள் கைது செய்து இவரை விட்டு விடுங்கள் என்று கோரினார்கள் ஆனால்  அவர்கள் இல்லை அவ்வாறு செய்தால் நாங்கள் அணியாயகாரர்களில் உள்ளவராக மாறிவிடுவோம் ஆதலால் அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று புன்யாமினை அழைத்து சென்று விட்டார்கள்

அப்பொழுது அந்த பத்து சகோதரர்களும் என்ன செய்வது என்று அறியாமல்  இருந்தார்கள் வேறு வழியில்லை தந்தையிடம் கூறிவிடுவோம் என்று கூறி புரபட்டார்கள் அங்கு தந்தையிடம் கூறியபொழுது அவர் அதனை ஏற்க்க வில்லை இவ்வாறுதான் நீங்கள் யூசுபை அழைத்து சென்றீர்கள் இப்பொழுது அவன் சகோதரனையும் இவ்வாரே செய்துவிட்டீர்கள்   என்று அழ தொடங்கிவிட்டார்கள் நான் அல்லாஹுவின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறேன் அவனே எங்களை சேர்த்து வைக்க போதுமானவன். .

நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அழுது அழுது அவருடைய பார்வை மங்கிவிட்டது அழுதுகொண்டே இருப்பதை கண்ட அவருடைய பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் வேண்டுமென்றால் யூசுபை தேடி வருகிறோம் என்று கூறி மீண்டும் மிஸ்ரு நாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் அமைச்சரே எங்களுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார் எங்களுக்கு மேலும் நல்ல தானியங்கள் நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தந்தையை நன்கு  கவனித்து கொள்வோம் என்று கூறினார்கள் அப்பொழுது
 நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் உங்கள் சகோதரன் யூசுபை என்ன செய்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா என்று கேட்டார் அப்பொழுது அவருக்கு புலப்பட்டது அப்போ நீங்கள் தான் யூசுபோ என்று கேட்டார்கள் அதற்க்கு ஆம் நான்தான் யூசுப் இவர்தான் எனது சகோதரன் புன்யாமின் என்று கூறினார் அப்பொழுது அவர்கள் ஆச்சர்யபட்டு  எப்படி நீ மந்திரியானாய் என்று கேட்டார்கள் நாமாக இருந்தால் என்ன பதில் வந்திருக்கும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் தெரியுமா என்று ஒரு பக்கத்துக்கு கதை சொல்வோம் ஆனால் நமது தந்தை  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள்  அல்லாஹ்தான்  தான் நாடியவருக்கு அருளை பொழிகிறான் அவன்தான் என்னை உயர்த்தினான்  என்று கூறினார்கள் அப்பொழுது அந்த பத்து பெரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டோம் என்று கூறி அவர்கள் அஞ்சினார்கள் நம்மை யூசுப் பலிவாங்கிவிடுவாரோ  என்று ஆனால் அவர் தனது சகோதரர்களை பார்த்து இன்று நான் உங்கள் எந்த பலிவாங்களும்  நடத்தபோவதில்லை அல்லாஹ்  உங்களுடைய பாவத்தை மன்னிப்பான் என்று கூறினார் அப்பொழுது அந்த சகோதரர்கள் அவர்களது தந்தையை பற்றி ஞாபக படுத்தினார்கள் நமது தந்தை உங்கள் இருவரையும் நினைத்து அழுது அழுது அவருடைய கண்பார்வை மங்கிவிட்டது என்று கூறினார்கள் இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள் தனது சட்டையை அவர்கள் சகோதரர்களிடம் கொடுத்து இந்த சட்டையை அவர் முகத்தில் வையுங்கள் என்று கூறினார்
அவர்கள் அந்த சட்டையை எடுத்து கொண்டு வந்தபொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இது யூசுபின் வாசனை வருகிறது எங்கே எனது மகன் யூசுப் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் அந்த சட்டையை முகத்தில் போட்டு ஆம் இது யூசுபின் சட்டைதான் என்று கூறி அவரின் முகத்தில் போர்த்தினார்கள் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இழந்த பார்வை மீண்டும் வந்துவிட்டது . அப்பொழுது தன் பிள்ளைகளை பார்த்து கூறினார்கள் நான் உங்களிடம் கூறவில்லையா  அல்லாஹ்  உங்களுக்கு அறிவிக்காததை எனக்கு அறிவிக்கிறான் என்று கூறினார் அதனை கேட்ட அந்த பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் தீங்கிளைத்துவிட்டோம் என்குக்காக நீங்களும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார்கள் அதற்க்கு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் என்னுடைய பிள்ளைகளே நிச்சயமாக உங்களுக்காக நானும் பாவ மன்னிப்பு தேடுவேன் என்று கூறினார் பிறகு அவர்கள் அனைவரும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது கோட்டைக்கு சென்றார்கள் சென்ற அனைவரும் அவரின் தந்தை உட்பட அனைவரும் அவரின் காலில் விழுந்து சஜ்தா செய்தார்கள் செய்தவுடம்  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள் தன்  தந்தையிடம் தந்தையே நான் சிறு வயதில் ஒரு கனவு  கண்டேன் அல்லவா பதினோரு நட்சத்திரங்களும் ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் என் காலில் விழுவதை போல் அந்த கனவிற்கு இப்பொழுது நடந்த சம்பவே விளக்கம் என்று பதிலளித்தார்  அதன் பிறகு  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் நபி யாகூப் அலைஹி வசல்லம் 17 ஆண்டுகள் வாழ்த்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் இத்துடன் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு முடிவுற்றது.
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தமான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முழுவதும்  உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்

மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருள்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே அல்லாஹுவின் அருளால் learnislamichistory .blogspot .com  என்ற blog ல்    இந்த பதிவுகளை சில கருத்துகளுடன் இணைத்து வழங்கி இருக்கிறேன் இன்ஷா அல்லா அந்த பதிவையும் சற்று உபயோகித்து பாருங்கள் உங்களது கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் அல்லா ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 









 

 




5 comments:

  1. அல்லாஹ்வும் அவர் புண்டையும் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. Unakku unnudaoya Maarkam enakku ennudaiya maarkam.ovvru aathmavum maranathai sandithe agavendum. Marana tharuvayil nee unavaai yaar unnai padaithawan endru. Anda nerathil nee Allah oruvan endru eeman kodu irupaayanal. Un uraividam saandiyaaga irukkum. Illayendral adu unakku kai sedamaga amainthu vidum. Allah ourvane. Avanku enda thevaiyum illai.nee muslima iruppathal avanukku enda nanmayum illai theemaiyum illai. Neeye Allah kuriyawaru nadandal un mudividal amaidiyaga irukkum. Allah ouran endru nee ertrikolla vital un uraividam bayangaramana naragamagawe irukkum. !!!!

      Delete
  2. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்

    ReplyDelete
  3. Engaloda iraivana thitta unakku entha thaguthium illa unakku puducha padi illa pinnadi munnadi moodittu po

    ReplyDelete
  4. Allah Akbar Allah miga periyavan

    ReplyDelete